Monday 27 December, 2010

???

 என்  நிகழ் காலங்களில் பிரதிபலிக்கும்


கடந்த காலங்களில் நீ என்னுள் வித்திட்ட

நிகழ்வுகளின் பிம்பங்கள் ...

சில மெய் பிம்பங்கலேன ....

பல பொய் பிம்பங்களாய் ....

அன்று என்னில் உறவாடிய நின் நட்பு

இன்று தலைகிழ் பிம்பமாய் ??

Wednesday 13 October, 2010

யார் நீ

யார் நீ


யார் இவள்??
என்னுள்ளே எனை அறியாமல் நுழைந்திட்டவள்
என்னுடல் சுமக்கும் மனம் பறித்து நீ
நானாகிய எனை நீக்கி நீயாகினாய்-எனினும்
நீயாகிய உனை சுமப்பது என்னுடலாயிற்றே ..
நீயாகிய நான் தேடியது அன்பு உறவுகளை
அங்கனம் பழகிய உறவுகளுக்குள் சிறிதும்
இரக்கமின்றி உண்மைதனை புதைக்க
கற்றுக்கொடுத்தது நானாகிய நீ ...

சில நேரம் நானாகவும் பல நேரம் நீயாகவும்
என்னுடல் நீ ஆட்கொள்ளும் நாடக மேடையென
நித்தம் நீ ஆடினாய் ஆனந்த கூத்து ....
நானாகிய நான் உடல் தொலைத்து ஓலமிடுதல்
உன் நடனத்தின் இசை கூட்டுவதாய் ஒப்பனை செய்தாய் ..

அந்த ஒற்றை நள்ளிரவில் தான் மெல்ல
வீறுகொண்டது நானாகிய நான் ...
நீயாகிய நானை என்னுடல் நீக்கி
அடிப்பெயர்த்து வீசி எரிந்தது...
சொட்டும் குருதியுடன் நீ மெல்ல
உயிர் நீக்குவது கண்டு நான் கண்ணிருடன்
வழி அனுப்பி வைக்கிறது ,,,,,,


மீண்டும் நானாகிய நான் என்னுளே
புகுந்து நான் நானகினேன் ...நீயாகிய நான்
விட்டு சென்ற கால்தடங்களை என் மனதில்
இருந்து அழிக்கும் நோக்கில் அதன் பக்கம்
நெருங்கி பார்க்கின்றேன் ஒவ்வொரு கால் தடங்களின்
அடியிலும் ஒட்டி கொண்டிருக்கின்றது சில நேச உள்ளங்களின்
உண்மையான அன்பும் ,பரிமாற்றங்களும் ..உன்னால்
இழந்த அவ்வுள்ளங்களுக்காக கரைகின்றது என் உயிரும் ...

எனை இழந்து நீயாகிய நான் வாழ்ந்த நாட்களின்
கல்லறையின் மேல் கண்ணீர் வடிகின்றது
நானாகிய நான் !!!!!!!!!!!!!

Thursday 19 August, 2010

குப்பைத்தொட்டி தரிசனம்

கால கண்ணாடியில் அழிந்துவிட்ட பாதரச முலாமாய்


கண்முன்னே மெல்ல சாகிறது குழந்தைக்கனவுகளும்

தொலையாடலில் வாரிசு எங்கே எனக்கேட்கும்

உறவின் வார்த்தைகளில் சூடுபட்டு வரிக்குதிரையின்

ஒப்பமாய் மாறிவிட்டது என் மனம்...


அம்மா என்று அழைக்க சொல்லிகொடுக்கப்பட்ட

தத்தையின் கூரிய அலகு குத்தி அர்த்தம் தொலைத்து

விதவை கோலம் கொண்டு வாடுகின்றது

என் செவி வாங்கிக்கொண்ட அதன் அம்மாக்களும்


ஏசியின் இடைவெளிக்குள் பிறந்துவிட்ட புறா

குஞ்சுகளின் சத்தம் கேட்டு விடிகின்றன என்

ஒவ்வொரு காலைகளும் புறாவாக மாற

வரம் வேண்டியவாறே ,,,,,


தோட்டத்தில் மொட்டுவிட்ட ரோஜாசெடியையும்

அதன் இலை அடியில் தொட்டில் கட்டிய

வண்ணத்து பூச்சியினையும்,சில புழுக்களை சுமக்கும்

கொத்தாய் காய்த்துவிட்ட கத்திரி செடியினையும்,

நோவின்றி வாயினால் செல்லக்கடிகடித்து மமதயாய்

குட்டிக்கு பாலுட்டும் அந்த சாம்பல் பூனையினையும்

ஏனோ ரசிக்காமல் அவைமீது கொண்ட தீராத பொறாமையின்

தீயை அணைக்க கண்ணீரை சுரக்கின்றது என் கண்களும்


அறுந்துவிட்ட வீணை கம்பிகளில் சுரம் தேடும் என்ராகங்கள்

துளையில்லா புல்லாங்குழலில் இசைதேடும் என்உதடுகள்

உளியின்றி சிலை செதுக்கும் என் கற்பனைகள்

கார்மேகம் இல்லை என அறிந்தும் மழைக்காக

ஏங்கும் என் வரண்டுவிட்ட பாலைவனங்களும்

இல்லாத கவிதைகளுக்காக அர்த்தங்கள்

எழுதும் என் விரல்களும் விரதம் கலையாமல்

ஷஷ்டியில் இருந்தும் அகப்பையில் கிட்டவில்லை

என்றாவது குப்பையில் கிட்டும் என நம்பிக்கையில்

தினம் ஒரு குப்பைத்தொட்டி தரிசனம்

Friday 23 July, 2010

விட்டில் பூச்சி

அடி பேதை பெண்னே!!


ஆடு ராமா என்றால் தனை மறந்து ஆட
நீ என்ன மந்தியினமா??- உனை விட
மந்தி மேலடி ,,ஆடையாவது முறையாய்
அணிந்து இருக்கும் !!!!!

அன்று புராணக்கதைகள் சொல்லப்ப்ட்டது
பாவைக்கூத்து என்ற முறையில் ....இன்று பல
பாவைகள் முறையின்றி கூத்தாடுவது
ரணக்கதைகளை அனுபவிக்கத்தானோ???

அந்நிய நாட்டில் தமிழ் கலாச்சாரத்தை சிறிதும்
நியாயமின்றி கொலைச்சொய்வதும் சரிதானோ??
அச்சிட்ட சில காகிதங்களுக்காக நம் கன்னித்தமிழ்
கற்பை சூறையாடுவதும் முறைதானோ???

பரதம் ஆடினால் பரத்தை என யாவரேனும்
மொழிவரோ?? நடனம் என்ற பெயரில்
நாணமின்றி நாடகம் ஆடுவதும் ஏன் தானோ??

உனை ஆட்டுவிப்பவனும் நீ ஆடி
உன்னால் ஆட்டுவிக்கப்படுவர்களும் உன்னில்
ஆடும் வரையில் நீ ஆட்டும் வரையில் தான்
உன்னுடன் என உணர மறுப்பதும்
உணர்த்த மறுப்பதும் முறைதானோ??

வாழ்க்கையின் வளைவுகளை சந்திக்க
தைரியம் இன்றி இவ்வழியினை கண்டு
உன் வளைவுகளால் சந்தி சிரிக்கப்படுவதும்
எவ்விதம் பொருத்தமாகும் பெண்ணே???
வளைவுகளும் நீ வளைந்துவிடும் வரையில் தான்!!!

கடல் கடந்து வாழ்வில் கரையேரிடும் ஆசையில்
இக்கரைத்தனில் கரண்சியினால் நினை
கறை ஆக்கிக்கொள்கிறாய் ஆசையுடன்
வாழ்க்கை கடலில் நின் மானம் முழ்கிவிட்டதறியாமல்...

வீழ்வேன் என நினைத்தனையோ என்ற
முண்டாசு கவிஞன் சொல் தொலைத்து
விழ்ந்தே தீருவேன் என வண்ண விளக்குகளின்
ஒளியில் தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும்
விட்டில் பூச்சியடி நீ!!!!!!!!!!!!!!


( அமீரகத்தில் இரவு சபைகளில் ( நடனம் ஆடும் சில தமிழச்சிக்களுக்காக.)

Sunday 27 June, 2010

மௌனம்




உன் கண்ணில் வடியும் ஒற்றை கண்ணீர்
என் உயிரின் துளி என அறியாயோ ...

மௌனமாய் நீ செல்கையில் சிக்குண்டு

சிதறும் மனதின் மரண ஓலத்தை கேளாயோ ...

சில நேரம் எச்சில் இலை என எறிவதும்

சில நேரம் மயில் இறகாய் எனை போகிப்பதும்

என் மீதான உன் ராஜ்யத்தில் எனகென்ன

நிரந்திர பதவி என மொழியாயோ ??



---------------------------------------------------------------------


உன்னை அகிம்சைவாதி என்றதன் அர்த்தம்

இன்று புரிகின்றது ஆம் நீ அகிம்சைவாதிதான்

வார்த்தையின்றி மௌனமாய் எனது

அகத்தில் இம்சை செய்யும் வாதி நீ

----------------------------------------------------------------------

உன் வார்த்தைகளால் எனை உயிர்பிப்பதும்

வார்த்தையின்றி மௌனமாய் கொல்வதும்

உனக்கென்ன கடவுள் அவதாரமென நினைவோ ??

--------------------------------------------------------------------------



தேடி தேடி பார்கிறேன் வாஞ்சையாய்

எந்த அகராதியிலும் கிடைக்கவில்லை

உன் மௌனமொழிக்கான அர்த்தம்

---------------------------------------------------------------------------

உன் நெஞ்சில் வாழும் பாக்கியம் இல்லை ...

உயிர் நீத்திட விரும்புகிறேன் -அதனால்

என்னவனே மௌனமாய் இரு-ஏன் எனில்

தற்கொலை கோழையின் முடிவாம் !!!!!!!!!

Friday 25 June, 2010

இதழ்-முத்தம் கவிதைகள்

என் பாலையில் உன்னால் அடிக்கடி


பூக்கும் உன்நினைவு மொட்டுக்கள்

முத்தமெனும் நீரை எதிர்ப்பார்த்தப்படி

----------------------------------------------------------

இதழ் குவித்து 'அப்புறம்' என்று நீ

சொல்லும் ஒற்றை சொல்லில்

ஒட்டிக்கொள்கிறது

உன் இதழுடன் என் நெஞ்சமும்

------------------------------------------------------

சுட்டெரித்த உன் ஒற்றை பார்வையில்

கரிந்து கரைந்து ஓடிய என் நாணம் இதழில்

புன்னகையாய் தவழும் சம்மதத்தின்

மொழியினை பேசியவாறு
-------------------------------------------------------
 
புரியவில்லை அன்பே.......
 
 நாம் முத்தமிடுகையில் காதலர்கள்
 
 நாமா இல்லை நம் இதழ்களா என்று
 
----------------------------------------------------------
 
அறியாமல் நீ கொடுக்கும் உன்
 
ஒற்றை முத்ததிற்க்காக ஏங்கும்
 
கண்ணா என் மனம் தினமும்...
 
மழலையின் இதழின் ஒத்தடதிற்கு
 
ஒப்புதலும் இங்குண்டோ???
 
-----------------------------------------------

Monday 21 June, 2010

வாழ்க்கை

என்னுடன்

நீ இருந்தாய் கவிதையானது

எனை பிரிந்தாய் கதையாகியது

Thursday 27 May, 2010

தற்(கரு)க்கொலை  


எனக்காக உன்


உயிர் கொடுப்பேன் என்றாய் அங்கனமே 

என் வயிற்றில் உயிர் கொடுத்தாய் ..

கொடுத்திட்ட உயிரை தொலைக்க சொல்கிறாயே

பிழை என்று அழித்திட கருவறை ஒன்றும்

கரும்பலகை அல்லவே??

தாய் பால் குடிக்கும் முன் கள்ளிப்பால்

கொடுக்க சொல்லும் நின் கருணை என்ன சொல்வேன்

என்னுடல் சுவைத்திட்ட நின் காதல் பொய்யாகலாம்

என்னுள் சுவாசிக்கும்  நின் மழலை மெய்யன்றோ?



ஜீவன் கொன்று என் ஜீவிதம் காண சொல்கிறாய்

மழலைக்கு ஏங்கியவளிடம் கருவறுக்க சொல்லுதல்

எங்கனம் நியாயம் ???நின் வாழ்வு எண்ணி எனை

பாவியாக்குதல் முறைதானோ?



உரிமையாய் கேட்டிட என்கொன்றும் இல்லை

முறையான முகவரி ....நின்னிடத்தில்

முறையின்றி வந்ததால் முத்தாய் தவழ்ந்திடும்

நின் மழலையின் மூச்சடுக்குதல் என்னால்

முடிந்துடுமோ ??

ஊரார் பலித்திடும் முன்னே என் ஜீவன்

உறைந்திடும் மண்ணில் நிம்மதியை நாடி

தவறொன்றும் செய்திடவில்லை நாங்கள்...

எனினும் விரைவில்

மரணத்தின் வாசம் சுவாசிக்கும்

ஆசையில் நொடிகளை கடக்கும்

என்னுடன் என் மழலையும்


Tuesday 13 April, 2010

ஒரு புன்னகையின் சிறு விசும்பல்




கண்ணீர் கொள்ள உன் கன்னத்தின் குழி கொடு

அங்கே தான் தொலைத்தேன் நம் உள்ளத்தின்

உறவுகளுக்கான வரையறைகளை...

உன்னால் பட்ட காயங்களை கண்ணீர் விட்டு கழுவ

என் கண்ணீர் ஒன்றும் புனிதம் அல்லவே ???

மஞ்சள் கயிறு ..நெற்றியில் குங்குமம்

ஒரு புடவை ...புனிதமென்றாலும்

உயிரற்ற இவைகள் எனக்குக்கொடுத்து

என்னுள் உயிர் புதைத்து சென்றாய் ..

கட்டிய கையிற்றை கேட்கின்றேன்

நீ எனக்கு மாங்கல்யமா ? இல்லை இழைத்த

துரோகத்தின் ஆசை முடிச்சுகள் சுமக்கும்

தூண்டில் கயிறா??

குங்குமத்தின் சிவப்பில் என்னால் ..

உறிஞ்சப்பட எனக்காக வாழும் உயிரின்

நம்பிக்கை குருதியின் சிவப்பை பார்கிறேன் ......

என்னால் எனது உறவுகளின் முகத்தில்

பூசப்பட்ட நம்பிக்கைதுரோக வர்ணங்களை

எப்படி போக்குவேன் ???என் உயிர் வடித்து

கழுவினாலும் போய்விடுமா ???

சுடும் நெருப்பு என அறிந்தும் உன்னில்

கொண்ட காதலில் விட்டில் பூச்சியாய் நான்,,

விட்டு ஒழிந்திட நினைத்தும் என்

வயிற்றில் ஒட்டிவிட்ட உன் ஒற்றை

உயிரை என்ன செய்வேன் ???

தவமின்றி தவறுதலாக தானாக வந்ததென

தயவின்றி கருகலைக்க நான்

தாடகை அல்லவே ....தயங்காமல் நிற்கின்றேன்

உன்னால் நான் தாரமாக ஏற்றுகொண்ட பின்னரே

தாயாகினேன் என்று ....

உறவுகள் தொலைத்து உயிர்ப்பித்த

நம் உறவு மலரும் முன்னே கருகிட்டதேன் ??

நின் கருசுமக்கும் வரம் கொடுத்து காற்றாக

நீ மறைந்திட்டதேன்??இனி எங்கணம்

நின்னை சேர்வேன் என் கணவா??

உலகம் நாளை பழிக்குமே??? சுமக்கும்

நின் சிசு நாளை நின்னை கேட்டால்

எங்கணம் பதிலுரைப்பேன் ???

துரோகத்தின் இரட்டை பிறவியென

என் பிறப்பு மண்ணில் இன்னும் பாரமே ??

உன்னை நித்தம் நினைத்துருக நான் பனித்துளி அல்லவே ...

காற்றில் கலந்து நின் சுவாசம் கலக்கும் கற்பூரம் .....

அங்ஙனமே விரும்புகின்றேன் ...நின்னோடு

நானும் காற்றாய் கலந்திடவே நின் மழலையை

என்னோடு அழைத்தபடியே ........



குறிப்பு : என்னுள் உயிராக வாழ்ந்து மறைந்த என் தோழிக்கு சமர்ப்பணம் ,,,

காதல் எந்த சாட்சியும் பார்ப்பதில்லை . .மனசாட்சி தவிர... சரியோ தவறோ
மனசுக்கு பிடித்து விட்டால் தராதரம் பார்க்க மறுத்து விடுகிறது ..அவளது காதலும் ஒரு முரண்பாடுதான் ...காற்றோடு கலந்து விட்டபின் காயங்கள் தோண்டுதல் நியாயமில்லை .....

Sunday 11 April, 2010

காதலின் இயற்பெயர் மரணமாம்.....

கல்லரையில் பூத்த மலரொன்று
கன்னி அவள் கூந்தல் சேரக்கொண்ட மோகம்

இங்கனமே.உன்னூடான என்

காதலும்.......
கடல் நீரில் கலந்து விட்ட என்

ஒற்றை கண்ணீர் துளி தேடி

தர சொல்கிறாய்..உன் மனதை

அறிந்து கொள்வதை காட்டிலும்

அது எனக்கு எளிதென்பதை அறியாமல்..
உனக்கென நான் காத்திருக்கும்

ஒவ்வொரு நொடிகளும் உன்னோடான

நினைவுவிதைகளை பதியம் போடும்

நெஞ்சமதில்..என் கண்களும்

நீரை வார்க்கும் சொட்டு பாசனமாய்.....

நீங்காத காயமாய் நீ கொடுத்த அந்த

ஒற்றை முத்தம்..கனவென்றாலும்

என் உதடுகளில் ஒட்டிவிட்ட உன்

இதழ்களின் சிவப்பு சொல்லும் உன்மீதான

காதலதை......
உறவுகளை சுட்டிக்காட்டி என் காதலதை

நீ நிராகரிக்கும் வேளைகளில் என் உயிர்

வேரை உன் சொற்கள் அறுத்தெடுப்பதை

நீ அறிவாயா?....

உன் மீது மதம் கொண்ட என் காதல்

உன்மதமதை பார்க்கவில்லையே..

அங்கனம் பார்த்து வர அது வியாபாரம்

இல்லையடி தோழியே.....சாதி காட்டி

சாகும் வரம் கொடுத்தாய்..
சுடும் பாலையில் பாரிஜாதமாய்

உன் நட்பு...உப்பு நீரின் மீதுக்கொண்ட

தாகத்தினால் என் கண்ணீரை பருகும்

முலைபால் பருகும் மழலை போல...
உனக்கென நான் வளர்த்த என் சுவாசமும்

மெல்ல முதுமை அடைந்து மரணத்தை

சுவாசிக்கும் நீ எனை நீங்கும் அக்கணமே...

Friday 26 March, 2010

குட்டி புலம்பல் --2

1.உன்னால்  அடிக்கடி
குழந்தை பெறும்
யோகம் எனக்கு ..
உணர்ச்சிகளின் குழந்தை
கவிதை தானே ..

2.வானவில்லின் விதவை கோலம் ...
   கண்ணீர் சிந்தும் மேகம் .....
   ( காதல் தோல்வி )


 

Friday 19 March, 2010

kutty kutty pulampal

நீ என்னிடம் பேசாதே
ஊடலில் தான் நீ இன்னும்
உறைகின்றாய் உயிருக்குள்


உனக்கு பிடித்த பாவை
என்பதால் என் உணர்ச்சிகளின்
கயிறு என்றும் உன் கைவசம்


கண்முன் வராதே என்கின்றாய்
உன்கருவிழிக்குள் எனை
ஒளித்து வைத்துக்கொண்டு....


சுருக்கு பைக்குள் ஒளிந்துக்கொள்ளும்
சில சில்லறைகளை போல் ரகசியமாய்
ஒளித்துக்கொண்டேன் உன் சிரிப்பொலிகளை


மண்பானைக்குள் முழ்கிய
நன்னாரி வேரென என்னுள்
நிரப்புகின்றது உன் நினைவு
காதல் வாசத்தை ...

Thursday 18 February, 2010

தனிமை--2


 நின்னை கண்ணன் என நினைத்தனயோ??
என் துயில் உருவி துகிலென
நின் மேனி போர்த்திக்கொள்வதில்
அப்படி ஒரு மோகமோ???

தூக்கம் ஆவியாகி இரவோடு கலந்திட
காயும் வெண்ணிலவுக்கும்
வாட்டும் உன் நினைவிற்கும் துணையாக
இதோ இவள்.....

பச்சையம் இழந்த பூந்தளிர் என
 நம்  வார்த்தைகள் பரிமாறிடாத
 இவ்விரவுகளும் தனிமையை
 காதலிக்க பழகிவிட்டன......




  

Sunday 14 February, 2010

சிரிக்கலாம் வாங்க..

இன்னைக்கு காதலர் தினம் ..

 உங்களில் சில பேருக்கு காதல் கை கூடியிருக்கலாம்...இன்னும் சில பேருக்கு கைக்கூடாமல் போய் இருக்கலாம் ..அப்படி பட்டவங்க கவலைப்படாமல் சந்தோஷமா better luck next time mamu அப்படி சொல்லிக்கிட்டு
இந்த  பதிவை படிச்சு கவலை மறந்து சிரிங்க..


மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?



தெரியலையா?


அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?



எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?


ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.
தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?


அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.



தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?


மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!



டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?


சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!
யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?
கடிகாரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!


இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க


லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!

ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?


நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!


போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?


பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்?


தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க!


அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?


சரோஜா! ஏன் கேக்குற?


அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?

பல்ப் - எடிசன்


ரேடியோ - மார்கோனி


பை-சைக்கிள் - மேக் மில்லன்


போன் - க்ராஹாம் பெல்


க்ராவிடி - நியூட்டன்


கரண்ட் - பாரடே


எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!

மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை


காட்டி நிறுத்தசொல்றாரு!


அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு


உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?


டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்!


பேசன்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்!!



ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்லா உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு


பொண்ணு தெரியுமா?


------ பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.







அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?


மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே


ஓடி போய்டாங்க!!


கொடூர மொக்கை!


என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்'ல


வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!!


இது தோழி ஒருத்தி என்னிடம் பகிர்ந்தது...இப்போ உங்களுக்காகவும்..

Wednesday 10 February, 2010

மன முராரி....


ஒற்றை வார்த்தையில் தான் தொடங்கினேன் ..
உனக்கும் எனக்குமான உன்னத உறவின்
இலக்கியத்தை..

அன்னாட்களில்...

நீயோ சுட்டெரிக்கும் சூரியனின் காதலன்...
உன் அனல் தெறிக்கும் வார்த்தைக்கதிர்களை
விரும்பி உட்கரித்து குளிர் ஒளி விசும்
நிலவுத்தோழியாய் நான்....
இங்கனம் அன்றோ  தொடங்கியது...
நம் நட்பின் முதல் அத்தியாயம்..

உன் நட்புவேண்டி நான் 
உனக்கே உனக்காக எழுதிக்காட்டிய
என் உணர்வின் வரிகள் எல்லாம்
உன்னால் விரும்பி சுமந்து கொண்டது
மொக்கை என்ற பட்டத்தை.- எனினும்
என் பேனாவோ..தொடர்ந்து காகிதத்திடம்
சொல்லாமல் இல்லை உன் மீதான நட்பின் ஆழத்தை...

பின்னொரு நாளில்....
இன்று  நீஎழுதிய கவிதை என் கண்ணீரை
வாங்கிக்கொண்டது தோழி என நீ மொழிந்தாய்
உடல் அற்ற காற்றாய் மனம் பறக்க கண்டேன்
உன் முதல் அன்பான வார்த்தைகள் நம்
நட்பு இலக்கியத்தில் பதிவதை எண்ணி..

மழைப்போல் என்றாவது வருவாய் ..
அன்னையிடம் அன்று பள்ளிதனில்
தான் கொண்ட அனுபவம் பகிர்ந்து கொள்ளும்
மழலையாய்  உனக்கான என் பகிர்தலும்
இங்கனமே இருக்கும்..தோழனே....

 உன் கவிதை படித்து உள்ளம் மீட்டும்
இசைக்கான ராகசுரங்கள் நான்...
தேன்பலா  சுவைக்கொண்ட உன் கவிதையின்
ஒவ்வொரு வார்த்தைச்சுளைகளை ரசித்து
உண்ணும் ரசிகை நான் நண்பனே....

இன்னாட்களில்...
ஆதவன் வருகையாய் தினம் உன் வருகை..
என் விரல்களும் காத்திருக்கும் உனக்கான
வார்த்தைகளை தட்டச்சு செய்ய கணினியின்
விரல்களுடன் கைக்கோர்த்தப்படியே..

முதன் முறையாய் உன் குரல் கேட்ட அன்று
உயிர்ப்பித்தேன் மறுமுறையென்றாய்...
நட்பில் ஏதோ நுழையக்கண்டேன்...
மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்க விரும்புவதாய்
சொன்னாய்.. நம் நட்பிலக்கியம் கருகும் வாடையறியாமல்.....

துகில்கொண்டு முகம் மறைக்க பழகிக்கொண்ட
 என்னால் என் உள்ளமதை மறைப்பது எளிதன்று...
உள்ளம் கொண்ட உணர்ச்சின் வடிவாய் நீ...
நட்பின் கற்பை காப்பாற்றும் நோக்கில்
மனமதை கல்லாய் மாற சாபம் கொடுத்த முனியாய் நான்...

Saturday 30 January, 2010

சிறு வலம்

வெண்பஞ்சு மேகம் தீண்டும்
நீள் நெடும் மரங்கள் சுமந்த
கானகத்தின் மடியில் தவழ்ந்திடும்
சின்னஞ்சிறு வண்ணத்துப்பூச்சியாய்
வனத்தில் ஒரு சிறுவலம்...

கானகத்தாயின் தாய்பாலென வழிந்திடும்
அருவியில் குளித்து பசித்தீர
 பருகிடும் மழலையாய்


விட்டொழிந்த தலைவன் காரணம்
பசலைப்படர் உடல்கொண்ட மரம்
தொட்டு ஆறுதல் சொல்லும் தோழியாய்..

மதுவுண்ட மங்கையென
காற்று காதலன் தீண்ட ராகம் மீட்டி
 நடனமிடும் மூங்கில் கூட்டத்துடன் 
நெஞ்சுவந்துஆடிடும் கூத்தாடியாய்.....


சுவடுகள் மாற்றி அமரும்
பதிவிரத கொள்கைக்கொல்லும்
குழவிகள் தேனுண்டு ரீங்காரமிட்டு
தழுவும் மலர்களை கண்களில்
சிறைக்கொண்டு அதன் எழிலை
மனதில் தீட்டூம் ஓவியனாய்....

இன்னும் பற்பலவாய் மாறி
இயற்கை அழகை இன்னும்
ருசித்து புசிப்பவளாய்
பயணிக்க துடிக்கிறேன்....

Sunday 24 January, 2010

அடியே.....




உனை தேவதை என்று மொழிந்தேன்-ஆனால்

உன் மனமெனும் சொர்க்க நரகக்குழியில்


நித்தம் உயிர் நீத்து,பிறக்கும் சாபம்


கொடுத்த கொடூர மோகினியடி நீ ......






உனை என் செல்லம் என்றேன்- ஆனால்


என் ஒவ்வொறு செல்களையும் உனது


நினைவென்னும் அமிலம் கொண்டு முழுவதுமாய்


அரித்துவிட்ட கருணையில்லா கரையானடி நீ.....






உனை பூவை என இயம்பி இன்புற்றேன் – ஆனால்


பூவின் மென்மைக்கொன்று நான்க்கொண்ட மோகத்தால்


எனை முழுவதுமாய் உன் நெஞ்சத்தில் உட்கரித்து


முழுங்கி விட்ட புதைக்குழியடி நீ....






உனை என் தங்கமே என்றழைத்தேன்.-ஆனால்


என் அங்கங்களை உன் வார்த்தையால்


எனை கொஞ்சம் கொஞ்சமாய்.சிதைத்து கூறுப்போட்டு


ரசிக்கும் கூரிய இரும்பு வாளடி நீ...






நீ சைவம் என்றல்லவா சொன்னாய் – ஆனால்


அமிலம் பூசிய நின் பார்வைக்கதிரால்


என்னில் ஊடூருவி உயிருடன் எனை


புசிக்கிக்கின்ற அகோரியடி நீ.....


( என்று வ ந்த்து..அசைவத்தின் மீது ஆசை??)

Tuesday 19 January, 2010

சுகமா ?? சுமையா ??

விளங்கவில்லை ...

எங்கனம் நுழைந்தாய் நெஞ்சுக்குள் ??

கரும்பாறை மனதில் சவ்வூடு பரவலாய்

கசிந்துருகும் நின் காதல் சுகமா ? சுமையா?

சுகமான சுமையா ? இல்லை சுமையாகிவிட்ட சுகமா ?

சுகம் எனில் பிரிவினில் ரத்த நாளங்களில்

உன் நினைவு முடிச்சுகள் முட்டி மோதி

சுமையாய் ஆனது ஏன் ???

சுமை எனில் உன் காதல் கொண்ட முகம்

நெஞ்சுக்குள் வந்து புரியாத சுகம் தருவதேன் ?

எங்கனம் நுழைந்தாய் நெஞ்சுக்குள் ???

உன்னை உள்ளத்தில் சுமந்ததால் சுகமா

சுகமான சுமையே ...உன்னை மனதில்

சுகமாய் என்றும் சுமப்பேன் --நீ எனை

சுமை என்று வேறு சுகம் நாடி சென்ற போதிலும் .....








Sunday 3 January, 2010

அக்னிக்குஞ்சு

நீங்க போய் உங்க பொண்ணை பார்க்கலாம் என்ற டாக்டரிடம் பிரவீன் டாக்டர் பாரதிக்கு இப்போ எப்படி இருக்கு ?? நீங்க தான் பிரவீனா ?? அவுங்க இப்போ நல்லா இருகாங்க .உங்க கிட்ட கொஞ்சம் சில விஷயங்கள் சொல்லணும் . ஓகே டாக்டர் . இதோ வாரேன் ..டாக்டர் சொன்னது கேட்டு வருந்தியவன் பாரதியை காண ஓடினான் .. அவசர சிகிச்சைப்பிரிவில் வாடிய மலரை போல கிடந்தாள் பாரதி .. அவள் நிலை கண்டு வருந்தினான் அவள் அருகே சென்று பாரதி ..நான் பிரவீன் வந்திருக்கேன் பாரு ..கண்களை மெதுவாக திறந்து பிரவீனை பார்த்தாள்.. என்னை தப்பா..நினைக்காதிங்க பிரவீன் என்றவளின் வாயை தன் கைகளால் மூடினான் இல்ல பாரதி அப்படி ஒன்றும் நீ தப்பு செய்யலையே ..எனக்கு உன் மேல எந்த கோபமும் இல்ல சொல்லப்போனால் உன்னை நினைச்சா பெருமையா இருக்கு. எந்த பொண்ணும் செய்ய தயங்குற விசயம் மா.. தன் கணவனுக்கு குழந்தை பிறக்காதுனு தெரிஞ்சா அவன் மேல வெறுப்பு தான் வரும் ஆனால்
எனக்காக உன்னோட கர்ப்பபையை எடுக்க துணிஞ்ச்சிட்டயே மா..?? .
ஆமா பிரவின் நீங்க எனக்கு முக்கியம் வயிற்றுல சுமந்தாதான் பிள்ளையா?? நாம வேறு குழந்தை தத்து எடுத்துக்கலாம் ஆனா நீங்க இல்லனா நான் எப்படி உயிருடன் இருப்பேனு நினைப்பீங்க பிரவீன்??

நான் உங்ககிட்ட இன்னொரு விசயமும் சொல்லனும் .என்ன அந்த அஞ்சலி பற்றி தானே?? டாக்டர் சொன்னார்டா.. அவளால் கரு உண்டாவதிற்கு முடியும் ஆனால்அந்த பொண்ணுக்கு ஒரு குழந்தையை சுமக்கிற அளவுக்கு அவுங்க கர்ப்பபை சக்தி இல்லை அதனால அ ந்த பொண்ணு மனம் உடைஞ்சு தற்கொலை முயற்சி
செய்ய போனதாகவும் நீ அ ந்த பொண்ணுக்கு கர்ப்பபை தானம் செய்ய தாயாராக இருப்பதையும் சொன்னார்டா..உங்க ஆனால் உங்க சம்மததிற்கு தான் காத்திருக்கேன்...பாரதி நான் அப்பவே அதுக்கான ஏற்பாடு பண்ணிட்டேன் மா...இது நானல நீ இன்னொரு பொண்ணுக்கும் வாழ்க்கை கொடுத்திருக்க யு வார் கிரேட்
I LOVE YOU BHARATHIII......