Sunday 27 June, 2010

மௌனம்




உன் கண்ணில் வடியும் ஒற்றை கண்ணீர்
என் உயிரின் துளி என அறியாயோ ...

மௌனமாய் நீ செல்கையில் சிக்குண்டு

சிதறும் மனதின் மரண ஓலத்தை கேளாயோ ...

சில நேரம் எச்சில் இலை என எறிவதும்

சில நேரம் மயில் இறகாய் எனை போகிப்பதும்

என் மீதான உன் ராஜ்யத்தில் எனகென்ன

நிரந்திர பதவி என மொழியாயோ ??



---------------------------------------------------------------------


உன்னை அகிம்சைவாதி என்றதன் அர்த்தம்

இன்று புரிகின்றது ஆம் நீ அகிம்சைவாதிதான்

வார்த்தையின்றி மௌனமாய் எனது

அகத்தில் இம்சை செய்யும் வாதி நீ

----------------------------------------------------------------------

உன் வார்த்தைகளால் எனை உயிர்பிப்பதும்

வார்த்தையின்றி மௌனமாய் கொல்வதும்

உனக்கென்ன கடவுள் அவதாரமென நினைவோ ??

--------------------------------------------------------------------------



தேடி தேடி பார்கிறேன் வாஞ்சையாய்

எந்த அகராதியிலும் கிடைக்கவில்லை

உன் மௌனமொழிக்கான அர்த்தம்

---------------------------------------------------------------------------

உன் நெஞ்சில் வாழும் பாக்கியம் இல்லை ...

உயிர் நீத்திட விரும்புகிறேன் -அதனால்

என்னவனே மௌனமாய் இரு-ஏன் எனில்

தற்கொலை கோழையின் முடிவாம் !!!!!!!!!

Friday 25 June, 2010

இதழ்-முத்தம் கவிதைகள்

என் பாலையில் உன்னால் அடிக்கடி


பூக்கும் உன்நினைவு மொட்டுக்கள்

முத்தமெனும் நீரை எதிர்ப்பார்த்தப்படி

----------------------------------------------------------

இதழ் குவித்து 'அப்புறம்' என்று நீ

சொல்லும் ஒற்றை சொல்லில்

ஒட்டிக்கொள்கிறது

உன் இதழுடன் என் நெஞ்சமும்

------------------------------------------------------

சுட்டெரித்த உன் ஒற்றை பார்வையில்

கரிந்து கரைந்து ஓடிய என் நாணம் இதழில்

புன்னகையாய் தவழும் சம்மதத்தின்

மொழியினை பேசியவாறு
-------------------------------------------------------
 
புரியவில்லை அன்பே.......
 
 நாம் முத்தமிடுகையில் காதலர்கள்
 
 நாமா இல்லை நம் இதழ்களா என்று
 
----------------------------------------------------------
 
அறியாமல் நீ கொடுக்கும் உன்
 
ஒற்றை முத்ததிற்க்காக ஏங்கும்
 
கண்ணா என் மனம் தினமும்...
 
மழலையின் இதழின் ஒத்தடதிற்கு
 
ஒப்புதலும் இங்குண்டோ???
 
-----------------------------------------------

Monday 21 June, 2010

வாழ்க்கை

என்னுடன்

நீ இருந்தாய் கவிதையானது

எனை பிரிந்தாய் கதையாகியது