1.உன்னால் அடிக்கடி
குழந்தை பெறும்
யோகம் எனக்கு ..
உணர்ச்சிகளின் குழந்தை
கவிதை தானே ..
2.வானவில்லின் விதவை கோலம் ...
கண்ணீர் சிந்தும் மேகம் .....
( காதல் தோல்வி )
Friday 26 March, 2010
Friday 19 March, 2010
kutty kutty pulampal
நீ என்னிடம் பேசாதே
ஊடலில் தான் நீ இன்னும்
உறைகின்றாய் உயிருக்குள்
உனக்கு பிடித்த பாவை
என்பதால் என் உணர்ச்சிகளின்
கயிறு என்றும் உன் கைவசம்
கண்முன் வராதே என்கின்றாய்
உன்கருவிழிக்குள் எனை
ஒளித்து வைத்துக்கொண்டு....
சுருக்கு பைக்குள் ஒளிந்துக்கொள்ளும்
சில சில்லறைகளை போல் ரகசியமாய்
ஒளித்துக்கொண்டேன் உன் சிரிப்பொலிகளை
மண்பானைக்குள் முழ்கிய
நன்னாரி வேரென என்னுள்
நிரப்புகின்றது உன் நினைவு
காதல் வாசத்தை ...
ஊடலில் தான் நீ இன்னும்
உறைகின்றாய் உயிருக்குள்
உனக்கு பிடித்த பாவை
என்பதால் என் உணர்ச்சிகளின்
கயிறு என்றும் உன் கைவசம்
கண்முன் வராதே என்கின்றாய்
உன்கருவிழிக்குள் எனை
ஒளித்து வைத்துக்கொண்டு....
சுருக்கு பைக்குள் ஒளிந்துக்கொள்ளும்
சில சில்லறைகளை போல் ரகசியமாய்
ஒளித்துக்கொண்டேன் உன் சிரிப்பொலிகளை
மண்பானைக்குள் முழ்கிய
நன்னாரி வேரென என்னுள்
நிரப்புகின்றது உன் நினைவு
காதல் வாசத்தை ...
Subscribe to:
Posts (Atom)