Thursday 27 August, 2009

நிழல் துறந்து நிஜம் நாடி.....

சுற்றிலும் சுகந்தம் நிறைந்த அறை
மனம் ஒத்தும் ஒப்பனைக்ககாவும்
வெளிவந்த சொந்தங்களின் கண்ணீர் துளிகள்
பேசதுடித்தும் முடியாமல் ஊமையாகிவிட்ட
வார்த்தைகளின் சுவடுகள் ..
வர்ணம் கலைந்த வானவில்லாய்
உருக்குலைந்து விட்ட என்னவளின்
வழிந்தொழுகும் உயிர் துளிகள்


இறுதியாய் அணிவிக்கப்பட்ட
புத்தம் புதிய வெண்ணிறாடை மட்டும்
உடைமையாய் கொண்டு இதோ ..
என் பயணம் புதிய உலகை நோக்கி
வழி நெடுகிலும் சுற்றார் உற்றாரும்
நண்பரும் பகைவரும் சூழ்ந்து வர
எழுத்அறிவித்து அறிவு புகட்டிய
பள்ளிகூடம்,நண்பர்களுடன் அரட்டை
அடித்த பசுமை நிறைந்த இடங்கள் ,
உயிர் அசைத்த என்னவளின் சிரிப்பலைகள்
நிறைந்த பேருந்துதடம் எல்லாம்
இன்று என்னை வழியனுப்பும் அமைதியாய்

இதோ வந்து விட்டது ஆண்டியும்
அரசனும் ஒன்று கலந்து விட்ட சமுத்துவபுறம் .
சுற்றிலும் இருள் சூழ தனிமையையே
சுவாசமாய் கொண்டு இருக்க
எனக்காய் எந்த ஒப்புதலும் இன்றி அளிக்கப்பட்ட
ஆறடி நிலம் ...மனதில் எதோ எதிர்பார்புடன்
அமைதியாய் என் நித்திரை ஆரம்பம் ....








Wednesday 12 August, 2009

என்னவளே வருவாயா?

கைகோர்த்து நீயும் நானும்
பள்ளி சென்ற போதும் ...
சிறு மண் வீடு கட்டி
கொட்டன்குச்சியில் வித விதமாக
சமைத்து விளையாடிட்ட போதும்

தேடி தேடி கவனமாய்
பட்டாம்பூச்சி பிடித்து மீண்டும்
பறக்க விட்டு ரசித்திட்ட போதும்
நீயும் நானும் நாம் என்று
இருந்தோமே என்னவளே....

புத்தம் புதிய தாவணி ,கஸ்துரி மஞ்சள் மணக்கும்
உன் முகம் நீ கொண்ட முதல் வெட்கம்
கன்னியென பதவி கொண்ட
அந்த நாளின் அனுபவங்கள் என்னிடம்
சொல்லி ரசித்திடஅந்த பொன்முகம்
இன்னும் அழிய வில்லையடி

கல்லூரி நாட்களில் வகுப்பில்
நீயும் நானும் படிப்பில் மட்டும் அல்லாது
நண்பர்களுடன் கேலி செய்து விளையாடி
களித்திட போதிலும் பிரிய வில்லையடி

ஊரார் கண் பட்டது போலும்
ஓசை இன்றி என்னிடம்
அறிவிப்பு ஒன்றும் இல்லாமல்
உன் உயிரை என்னுள் செலுத்தி
உடல் கொண்டு சென்றாயடி

காலமகள் கையில்
கலந்து கரைந்திட போதும்
நான் ராகம் இல்லா
வீணையாய் உன் நினைவு என்னும்
கம்பிகள் மட்டும் சுமந்து வாழ்கின்றேன்

நீ இன்றி .....
என் சந்தோசம் கூட வர்ணம் இல்லா
வான வில்லாய் சில துளிகள்
மட்டும் சுமக்கும் கரும் மேகமாய் தெரிகின்றது

என் உள்ளம் படித்த என்னவளே
உருகி வடிகின்ற மெழுகாய்
கொஞ்சம் கொஞ்சமாய் உருகும்
என் உயிரும் உன்னை காண்பது
எப்போது?
என் பெண்மை உணர்வுகள்
உன்னில் நான் பகிர்ந்து
கொள்ளவும் , கவலை கொண்ட
பொது சேயாய் மாறி உன் மடியில்
உறங்கிடவும் என்னவளே நீ
மீண்டும் வருவாயா???/