Thursday 18 February, 2010

தனிமை--2


 நின்னை கண்ணன் என நினைத்தனயோ??
என் துயில் உருவி துகிலென
நின் மேனி போர்த்திக்கொள்வதில்
அப்படி ஒரு மோகமோ???

தூக்கம் ஆவியாகி இரவோடு கலந்திட
காயும் வெண்ணிலவுக்கும்
வாட்டும் உன் நினைவிற்கும் துணையாக
இதோ இவள்.....

பச்சையம் இழந்த பூந்தளிர் என
 நம்  வார்த்தைகள் பரிமாறிடாத
 இவ்விரவுகளும் தனிமையை
 காதலிக்க பழகிவிட்டன......




  

Sunday 14 February, 2010

சிரிக்கலாம் வாங்க..

இன்னைக்கு காதலர் தினம் ..

 உங்களில் சில பேருக்கு காதல் கை கூடியிருக்கலாம்...இன்னும் சில பேருக்கு கைக்கூடாமல் போய் இருக்கலாம் ..அப்படி பட்டவங்க கவலைப்படாமல் சந்தோஷமா better luck next time mamu அப்படி சொல்லிக்கிட்டு
இந்த  பதிவை படிச்சு கவலை மறந்து சிரிங்க..


மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?



தெரியலையா?


அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?



எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?


ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.
தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?


அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.



தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?


மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!



டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?


சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!
யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது?
கடிகாரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!


இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க


லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!

ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?


நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!


போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?


பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்?


தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க!


அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?


சரோஜா! ஏன் கேக்குற?


அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?

பல்ப் - எடிசன்


ரேடியோ - மார்கோனி


பை-சைக்கிள் - மேக் மில்லன்


போன் - க்ராஹாம் பெல்


க்ராவிடி - நியூட்டன்


கரண்ட் - பாரடே


எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!

மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை


காட்டி நிறுத்தசொல்றாரு!


அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு


உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?


டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்!


பேசன்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்!!



ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்லா உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு


பொண்ணு தெரியுமா?


------ பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.







அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?


மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே


ஓடி போய்டாங்க!!


கொடூர மொக்கை!


என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்'ல


வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!!


இது தோழி ஒருத்தி என்னிடம் பகிர்ந்தது...இப்போ உங்களுக்காகவும்..

Wednesday 10 February, 2010

மன முராரி....


ஒற்றை வார்த்தையில் தான் தொடங்கினேன் ..
உனக்கும் எனக்குமான உன்னத உறவின்
இலக்கியத்தை..

அன்னாட்களில்...

நீயோ சுட்டெரிக்கும் சூரியனின் காதலன்...
உன் அனல் தெறிக்கும் வார்த்தைக்கதிர்களை
விரும்பி உட்கரித்து குளிர் ஒளி விசும்
நிலவுத்தோழியாய் நான்....
இங்கனம் அன்றோ  தொடங்கியது...
நம் நட்பின் முதல் அத்தியாயம்..

உன் நட்புவேண்டி நான் 
உனக்கே உனக்காக எழுதிக்காட்டிய
என் உணர்வின் வரிகள் எல்லாம்
உன்னால் விரும்பி சுமந்து கொண்டது
மொக்கை என்ற பட்டத்தை.- எனினும்
என் பேனாவோ..தொடர்ந்து காகிதத்திடம்
சொல்லாமல் இல்லை உன் மீதான நட்பின் ஆழத்தை...

பின்னொரு நாளில்....
இன்று  நீஎழுதிய கவிதை என் கண்ணீரை
வாங்கிக்கொண்டது தோழி என நீ மொழிந்தாய்
உடல் அற்ற காற்றாய் மனம் பறக்க கண்டேன்
உன் முதல் அன்பான வார்த்தைகள் நம்
நட்பு இலக்கியத்தில் பதிவதை எண்ணி..

மழைப்போல் என்றாவது வருவாய் ..
அன்னையிடம் அன்று பள்ளிதனில்
தான் கொண்ட அனுபவம் பகிர்ந்து கொள்ளும்
மழலையாய்  உனக்கான என் பகிர்தலும்
இங்கனமே இருக்கும்..தோழனே....

 உன் கவிதை படித்து உள்ளம் மீட்டும்
இசைக்கான ராகசுரங்கள் நான்...
தேன்பலா  சுவைக்கொண்ட உன் கவிதையின்
ஒவ்வொரு வார்த்தைச்சுளைகளை ரசித்து
உண்ணும் ரசிகை நான் நண்பனே....

இன்னாட்களில்...
ஆதவன் வருகையாய் தினம் உன் வருகை..
என் விரல்களும் காத்திருக்கும் உனக்கான
வார்த்தைகளை தட்டச்சு செய்ய கணினியின்
விரல்களுடன் கைக்கோர்த்தப்படியே..

முதன் முறையாய் உன் குரல் கேட்ட அன்று
உயிர்ப்பித்தேன் மறுமுறையென்றாய்...
நட்பில் ஏதோ நுழையக்கண்டேன்...
மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்க விரும்புவதாய்
சொன்னாய்.. நம் நட்பிலக்கியம் கருகும் வாடையறியாமல்.....

துகில்கொண்டு முகம் மறைக்க பழகிக்கொண்ட
 என்னால் என் உள்ளமதை மறைப்பது எளிதன்று...
உள்ளம் கொண்ட உணர்ச்சின் வடிவாய் நீ...
நட்பின் கற்பை காப்பாற்றும் நோக்கில்
மனமதை கல்லாய் மாற சாபம் கொடுத்த முனியாய் நான்...