Friday 23 July, 2010

விட்டில் பூச்சி

அடி பேதை பெண்னே!!


ஆடு ராமா என்றால் தனை மறந்து ஆட
நீ என்ன மந்தியினமா??- உனை விட
மந்தி மேலடி ,,ஆடையாவது முறையாய்
அணிந்து இருக்கும் !!!!!

அன்று புராணக்கதைகள் சொல்லப்ப்ட்டது
பாவைக்கூத்து என்ற முறையில் ....இன்று பல
பாவைகள் முறையின்றி கூத்தாடுவது
ரணக்கதைகளை அனுபவிக்கத்தானோ???

அந்நிய நாட்டில் தமிழ் கலாச்சாரத்தை சிறிதும்
நியாயமின்றி கொலைச்சொய்வதும் சரிதானோ??
அச்சிட்ட சில காகிதங்களுக்காக நம் கன்னித்தமிழ்
கற்பை சூறையாடுவதும் முறைதானோ???

பரதம் ஆடினால் பரத்தை என யாவரேனும்
மொழிவரோ?? நடனம் என்ற பெயரில்
நாணமின்றி நாடகம் ஆடுவதும் ஏன் தானோ??

உனை ஆட்டுவிப்பவனும் நீ ஆடி
உன்னால் ஆட்டுவிக்கப்படுவர்களும் உன்னில்
ஆடும் வரையில் நீ ஆட்டும் வரையில் தான்
உன்னுடன் என உணர மறுப்பதும்
உணர்த்த மறுப்பதும் முறைதானோ??

வாழ்க்கையின் வளைவுகளை சந்திக்க
தைரியம் இன்றி இவ்வழியினை கண்டு
உன் வளைவுகளால் சந்தி சிரிக்கப்படுவதும்
எவ்விதம் பொருத்தமாகும் பெண்ணே???
வளைவுகளும் நீ வளைந்துவிடும் வரையில் தான்!!!

கடல் கடந்து வாழ்வில் கரையேரிடும் ஆசையில்
இக்கரைத்தனில் கரண்சியினால் நினை
கறை ஆக்கிக்கொள்கிறாய் ஆசையுடன்
வாழ்க்கை கடலில் நின் மானம் முழ்கிவிட்டதறியாமல்...

வீழ்வேன் என நினைத்தனையோ என்ற
முண்டாசு கவிஞன் சொல் தொலைத்து
விழ்ந்தே தீருவேன் என வண்ண விளக்குகளின்
ஒளியில் தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும்
விட்டில் பூச்சியடி நீ!!!!!!!!!!!!!!


( அமீரகத்தில் இரவு சபைகளில் ( நடனம் ஆடும் சில தமிழச்சிக்களுக்காக.)