Tuesday 13 April, 2010

ஒரு புன்னகையின் சிறு விசும்பல்




கண்ணீர் கொள்ள உன் கன்னத்தின் குழி கொடு

அங்கே தான் தொலைத்தேன் நம் உள்ளத்தின்

உறவுகளுக்கான வரையறைகளை...

உன்னால் பட்ட காயங்களை கண்ணீர் விட்டு கழுவ

என் கண்ணீர் ஒன்றும் புனிதம் அல்லவே ???

மஞ்சள் கயிறு ..நெற்றியில் குங்குமம்

ஒரு புடவை ...புனிதமென்றாலும்

உயிரற்ற இவைகள் எனக்குக்கொடுத்து

என்னுள் உயிர் புதைத்து சென்றாய் ..

கட்டிய கையிற்றை கேட்கின்றேன்

நீ எனக்கு மாங்கல்யமா ? இல்லை இழைத்த

துரோகத்தின் ஆசை முடிச்சுகள் சுமக்கும்

தூண்டில் கயிறா??

குங்குமத்தின் சிவப்பில் என்னால் ..

உறிஞ்சப்பட எனக்காக வாழும் உயிரின்

நம்பிக்கை குருதியின் சிவப்பை பார்கிறேன் ......

என்னால் எனது உறவுகளின் முகத்தில்

பூசப்பட்ட நம்பிக்கைதுரோக வர்ணங்களை

எப்படி போக்குவேன் ???என் உயிர் வடித்து

கழுவினாலும் போய்விடுமா ???

சுடும் நெருப்பு என அறிந்தும் உன்னில்

கொண்ட காதலில் விட்டில் பூச்சியாய் நான்,,

விட்டு ஒழிந்திட நினைத்தும் என்

வயிற்றில் ஒட்டிவிட்ட உன் ஒற்றை

உயிரை என்ன செய்வேன் ???

தவமின்றி தவறுதலாக தானாக வந்ததென

தயவின்றி கருகலைக்க நான்

தாடகை அல்லவே ....தயங்காமல் நிற்கின்றேன்

உன்னால் நான் தாரமாக ஏற்றுகொண்ட பின்னரே

தாயாகினேன் என்று ....

உறவுகள் தொலைத்து உயிர்ப்பித்த

நம் உறவு மலரும் முன்னே கருகிட்டதேன் ??

நின் கருசுமக்கும் வரம் கொடுத்து காற்றாக

நீ மறைந்திட்டதேன்??இனி எங்கணம்

நின்னை சேர்வேன் என் கணவா??

உலகம் நாளை பழிக்குமே??? சுமக்கும்

நின் சிசு நாளை நின்னை கேட்டால்

எங்கணம் பதிலுரைப்பேன் ???

துரோகத்தின் இரட்டை பிறவியென

என் பிறப்பு மண்ணில் இன்னும் பாரமே ??

உன்னை நித்தம் நினைத்துருக நான் பனித்துளி அல்லவே ...

காற்றில் கலந்து நின் சுவாசம் கலக்கும் கற்பூரம் .....

அங்ஙனமே விரும்புகின்றேன் ...நின்னோடு

நானும் காற்றாய் கலந்திடவே நின் மழலையை

என்னோடு அழைத்தபடியே ........



குறிப்பு : என்னுள் உயிராக வாழ்ந்து மறைந்த என் தோழிக்கு சமர்ப்பணம் ,,,

காதல் எந்த சாட்சியும் பார்ப்பதில்லை . .மனசாட்சி தவிர... சரியோ தவறோ
மனசுக்கு பிடித்து விட்டால் தராதரம் பார்க்க மறுத்து விடுகிறது ..அவளது காதலும் ஒரு முரண்பாடுதான் ...காற்றோடு கலந்து விட்டபின் காயங்கள் தோண்டுதல் நியாயமில்லை .....

Sunday 11 April, 2010

காதலின் இயற்பெயர் மரணமாம்.....

கல்லரையில் பூத்த மலரொன்று
கன்னி அவள் கூந்தல் சேரக்கொண்ட மோகம்

இங்கனமே.உன்னூடான என்

காதலும்.......
கடல் நீரில் கலந்து விட்ட என்

ஒற்றை கண்ணீர் துளி தேடி

தர சொல்கிறாய்..உன் மனதை

அறிந்து கொள்வதை காட்டிலும்

அது எனக்கு எளிதென்பதை அறியாமல்..
உனக்கென நான் காத்திருக்கும்

ஒவ்வொரு நொடிகளும் உன்னோடான

நினைவுவிதைகளை பதியம் போடும்

நெஞ்சமதில்..என் கண்களும்

நீரை வார்க்கும் சொட்டு பாசனமாய்.....

நீங்காத காயமாய் நீ கொடுத்த அந்த

ஒற்றை முத்தம்..கனவென்றாலும்

என் உதடுகளில் ஒட்டிவிட்ட உன்

இதழ்களின் சிவப்பு சொல்லும் உன்மீதான

காதலதை......
உறவுகளை சுட்டிக்காட்டி என் காதலதை

நீ நிராகரிக்கும் வேளைகளில் என் உயிர்

வேரை உன் சொற்கள் அறுத்தெடுப்பதை

நீ அறிவாயா?....

உன் மீது மதம் கொண்ட என் காதல்

உன்மதமதை பார்க்கவில்லையே..

அங்கனம் பார்த்து வர அது வியாபாரம்

இல்லையடி தோழியே.....சாதி காட்டி

சாகும் வரம் கொடுத்தாய்..
சுடும் பாலையில் பாரிஜாதமாய்

உன் நட்பு...உப்பு நீரின் மீதுக்கொண்ட

தாகத்தினால் என் கண்ணீரை பருகும்

முலைபால் பருகும் மழலை போல...
உனக்கென நான் வளர்த்த என் சுவாசமும்

மெல்ல முதுமை அடைந்து மரணத்தை

சுவாசிக்கும் நீ எனை நீங்கும் அக்கணமே...