Wednesday 11 March, 2009

பாரதி ஒரு கேள்விகுறி

பால் நிலா வெளிச்சம்..ஜன்னல் வழியே அறையில் அடிக்க அதை ரசித்து கொண்டேருந்தவள் மனதில் ஏதோ பயம் அடிக்கடி வந்து போனது .. தூக்கம் வராமல் தவித்தவள் வெளியே வந்தாள். நிலவின் வெளிச்சத்தில் தன்னை முழுமையாக நனைதவள் அருகில் இருந்த ரோஜா செடியை பார்த்தாள்..தென்றலோடு ஏதோ ரகசியம் பேசும் அந்த மலரை உற்று நோக்கியபடி இருந்தாள் ஆனால் மனதில் அந்த பயம் வந்து வந்து போனது. பயமும் எதிர்பார்ப்பும் அதிகரிக்க கடிகாரத்தை விட இவள் மனம் வேகமாக சென்றது .

பின்பு எதோ நினைத்தபடியே...அங்கயே கண் அயர்ந்து போனாள்.

பாரதி.....ஏய் பாரதி ...இன்னும் என்ன தூக்கம் ..என்னமா இங்கேயா தூங்கினா... ஐயோ .. என்ன பொண்ணுமா நீ .சரி ...மணி ஒன்பது வந்து குளிச்சிட்டு ரெடியா இரு சரியானு சொல்லிட்டே போன தன் அம்மாவை பார்த்தாள் ..திடீரென மனதில்

மணி அடிக்க ஐயோ மணி ஒன்பதா ...என்று பதறியபடி மாடி விட்டு இறங்கி...ஓடி சென்றவள் விட்டு வாசலில் இவள் நினைத்த படியே செய்தி தாள் கிடக்க மனதில் பயமும் ஆவலும் அதிகரிக்க பிரிந்து பார்த்தாள் ..எதோ தேடியவள் முகம் அந்த சூரியனை விட பிரகாசிக்க ஹையா ......நான் பாஸ் பண்ணிட்டேன் ....அம்மா

இங்கே வாங்க ...இங்கே பாருங்க நான் பாஸ் பண்ணிட்டேனு குதித்தாள்.

என்ன பாரதி இதுல என்ன அதிசயம் என் பொண்ணு எப்பவும் பாஸ் தானே .சரிமா நேரம் போகுது குளிச்சிட்டு ரெடியா இரு ..இன்னைக்கு உன்னை பாக்க சென்னைல இருந்து நம்ம விசாலம் அத்தையோட சொந்த காரங்க வராங்க . அம்மா அவுங்க எதுக்கு வராங்க நான் பாஸ் பண்ணியதுக்கு மாலை போட வரங்களா ... ஐயோ எனக்கு எதுக்குமா இந்த மாலை மரியாதை...வேண்டாம் வேண்டாம் இதுலாம் பாரதி வாழ்கையிலசகஜம்

என்று விளையாட்டாக சொல்லி சிரித்தவள் அடுத்து ,பாரதி உன்னை அவுங்க பொண்ணு பாக்க வாரங்கமா என்று சொன்ன அவள் அமமா சொன்னதும்

அதிர்ச்சியில் உறைந்து பின்பு எரிமலையாய் மாறி என்ன இது நான் இப்போ தான் பன்னிரண்டு பாஸ் பண்ணி இருக்கேன் இன்னும் நிறைய படிக்கணும் ..நல்ல படிச்சு நல்ல ஒரு வேலைக்கு போகணும் .அப்புறம் பார்த்துக்கலாம். பாரதி இங்கே பாருமா அம்மா சொன்ன கேட்கணும் .அம்மா சொன்ன கேட்பேன் ஆனா ந கிட்ட கேட்காம நீங்க இப்படி ஏன் பன்னுறேங்க . சாரி மா என்னால முடியாது காம்பெல் பண்ண வேண்டாம் . இல்லை பாரதி நீ சின்ன பொண்ணு உன் அப்பா வருவதுக்கு முன்னாடி ரெடியா இருன்னு போன அம்மாவையே பார்த்தவளின்

மனதில் ஏதோ தோன்ற உறுதி கொண்டவளாய் தன் அறை நோக்கி நடந்தவள் கதவை தாளிட்டு படுகையில் சரிந்தாள் .பாரதி ....பாரதின்னு ..யாரோ கதவை தட்டும் ஓசை கேட்க மெதுவா கதவை திறந்து விசாலம் அத்தையின் சிரிப்பையும் மலர்ந்த முகமும் என்றும் இல்லாமல் இன்று எரிச்சல் உட்ட அதை வெளி கட்டாமல் வாங்க அத்தை ..நல்ல இருக்கீங்களா மாமா நலமா ? ஆமாமா எல்லோரும் நலம் .நீ ஏன்மா இன்னுமா உன்னை பார்க்க என் அக்காவும் மாமாவும் அப்புறம் அவுங்க பையனும் வந்திருகாங்க சிக்கிரம் ரெடியா இருமா

சரிங்க அத்தை நான் இப்போ ரெடி ஆகிடுறேனு சொல்லி சிரித்தவள் நெஞ்சில் எதோ திட்டம் இருந்தது .......( மீண்டும் வருவாள் ...)

குறிப்பு : நண்பர்களே ...இது வரை என் மொக்கை கவிதையால் உங்களை இம்சை படுத்திய நான் இன்று "பாரதி ஒரு கேள்வி குறி " என்ற கதை போட்டு உங்களை இம்சை படுத்த ஆரம்பித்து விட்டேன் ..எப்போது போல உங்கள் ஒட்டு வேணும் ...நன்றி ..ஹா ஹா ஹா

விடை கொடு நண்பா

பழகிறாத அந்த நாட்களில் சுட்டெரிக்கும்
பாலைவன கள்ளியாய் இருந்தது நம் நட்பு -பின்
பனி துளி சுமந்த சிறு மொட்டு பூப்பது போல
பந்தம் கொண்டு நட்புடன் உறவாடிட யாரும்
பாராமல் சத்தம் இன்றி பூத்தது நம் நட்பு (பூ) நண்பனே...

பார்வைகள் பரிமாறி நம் நட்பு
பயணம் தொடர வில்லையே ...மெய்யான
பாசம் கொண்ட இதயத்திற்கு முன் -பொய்யான
பார்வையால் கிடைக்கும் பிம்பத்திற்கு
பலன் ஒன்றும் இல்லையே நண்பா......

வானம் பாடி போல் நாம் நட்பு கீதம்
வானில் பாடி திரிந்த அந்த அழகிய
வசந்தகாலம் முடிந்தது என்று உன்
வார்த்தையால் என் இதயம் கிழித்து
வன்முறை கொண்டாயே நண்பா

வாழும் காலம் வரை நம் நட்பு
வாடா மலராய் இருக்கும் என்று -என்னில்
வாக்கு மொழிந்தாயே அன்று...ஆனால் இன்று
வாடி போனது உன் நட்பா இல்லை
வதங்கி போன என் இதயமா நண்பா???

காலம் எல்லாம் வர எண்ணி நம் நட்பை
கல்லில் செதுக்கினேன் நான் ---- நீயோ
காற்றி எழுதி வைத்தாயே .... ஏன்
கலைந்து போக நம் நட்பு என்ன
கனவா இல்லை தூரம் தோன்றும்
கானல் நீரா நண்பா????????????

கண்ணில் காவியம் படித்த என்
கண்களும் இன்று ஏனோ
கண்ணீருடன் தீராத காதல் கொண்டு
கரை உடைத்து ஓலமிட்டு ஓடும்
காட்டாறு போல மாறியதும் ஏன்னென்று
காரணம் அறிவாயோ நண்பா

கொஞ்ச கொஞ்சமா பிரிந்து விடு என்கிறாய்
சின்னம் சின்னமாய் என் உயிர் சிதைந்ததும்
தெரியாமல் ...தவணை முறை கொண்டு உறவாட
நான் தயாராகவில்லை நண்பா...
காற்றில் நான் ஒன்றாகும் அந்த காலம் வரை
உன் நட்போடு என் கனவில் உறவாட
இப்போதே விடை கொடு நண்பா



































Tuesday 3 March, 2009

எனக்கு மட்டுமே சொந்தம் ...


உன்னை பூ என்று சொல்ல மாட்டேன் ... ஏன்னென்றால்
பூவில் பல வண்டுகள் மொய்ப்பதால் தான் -- நீ
எனக்கு மட்டுமே சொந்தம் ..
உன்னை நிலவு என்று சொல்ல மாட்டேன் ---ஏன்னென்றால்
அதை சுற்றிபல விண்மின்கள் கண் இமைப்பதால் தான் -நீ
எனக்கு மட்டுமே சொந்தம் ...
உன்னை காற்று என்று சொல்லமாட்டேன் ...ஏன்னென்றால்
உன்னை அனைவரும் சுவாசிக்க கூடும்...நீ
எனக்கு மட்டுமே சொந்தம்.....
உன்னை எதனுடனும் ஒப்பிடமாட்டேன் .... ஏன்னென்றால்

உனக்கு இணை நான் தானடி .... நீ

எனக்கு மட்டுமே சொந்தம் ...









Monday 2 March, 2009

மொக்கை காதல்

உயிரே....
உதடுகள் சேர்த்து நீ " உச் '' கொட்டும் போதெல்லாம்-என்
உள்ளத்தில் ஆசை தேள் '' நச் '' என்று கொட்டுகின்றது
உன்னிடம் என் காதலை ''பச்'' என்று சொல்ல எண்ணியப் போதெல்லாம்
ஊடல் கொண்டு ''கிச் '' என்று சென்று விடுவாயோ என
உறைந்து போகின்றேனடி ......



க‌ண்மூடி நீயும் துயில் கொள்



கனவுகள் தொலைத்து மனதை


கலக்கும் குழப்பங்கள் விரட்டி தென்றல்


காற்று அமைதியாய் உன்னை தழுவ


கருவிழி மூடி உள்ளத்தில் உள்ள


காயங்கள் நீங்க சிறு குழந்தை போல

க‌ண்மூடி நீயும் துயில் கொள்.....

கலங்கி நிக்க நீ பிறக்கவில்லை பல

காவியம் படைத்திட நீ பிறந்தாய் ஆகையால்

கண்ணே க‌ண்மூடி நீயும் துயில் கொள்.



Sunday 1 March, 2009

பூமகளே...


சின்னஞ்சிறு கைஅசைத்து ..
சிரிக்கும் உன் முகம் பார்க்கும் போது
சிந்தனையும் கொஞ்சம் என்னை விட்டு
சிதறி செல்கின்றது ...
பூமியில் தேடினேன் அழகான
பூ ஏதேனும் உண்டா ஏன்று
புன்னகை புரியும் சின்னஞ்சிறு
பூவே .........நீ தான் இந்த
பூமியில் பிறந்திட்ட ...முதல் உயிர் உள்ள
பூ ஆகும்..... என் மடியில் தவழும்
பூமகளே... என்றும் நம் வீடு உன் வருகையால்
பூக்கோலம் ....காண்கின்றது