Thursday 18 February, 2010

தனிமை--2


 நின்னை கண்ணன் என நினைத்தனயோ??
என் துயில் உருவி துகிலென
நின் மேனி போர்த்திக்கொள்வதில்
அப்படி ஒரு மோகமோ???

தூக்கம் ஆவியாகி இரவோடு கலந்திட
காயும் வெண்ணிலவுக்கும்
வாட்டும் உன் நினைவிற்கும் துணையாக
இதோ இவள்.....

பச்சையம் இழந்த பூந்தளிர் என
 நம்  வார்த்தைகள் பரிமாறிடாத
 இவ்விரவுகளும் தனிமையை
 காதலிக்க பழகிவிட்டன......




  

9 comments:

Anonymous said...

பச்சையம் இழந்த பூந்தளிர் என
நம் வார்த்தைகள் பரிமாறிடாத
இவ்விரவுகளும் தனிமையை
காதலிக்க பழகிவிட்டன......

உணர்ந்தவர்களுக்குள் ஊடுறுவும் வார்த்தைகள்...


//இரவுகளும் தனிமையை காதலிக்க பழகிவிட்டன்....//

//நின்னை கண்ணன் என நினைத்தனயோ??
என் துயில் உருவி துகிலென
நின் மேனி போர்த்திக்கொள்வதில்
அப்படி ஒரு மோகமோ???//

புதுவடிவில் புனையப்பட்ட வரிகள் அழகோ அழகு,,,, எனக்கு பிடிச்சிருக்கு அனு,,,,,

Anonymous said...

பச்சையம் இழந்த பூந்தளிர் என
நம் வார்த்தைகள் பரிமாறிடாத
இவ்விரவுகளும் தனிமையை
காதலிக்க பழகிவிட்டன......

உணர்ந்தவர்களுக்குள் ஊடுறுவும் வார்த்தைகள்...


//இரவுகளும் தனிமையை காதலிக்க பழகிவிட்டன்....//

//நின்னை கண்ணன் என நினைத்தனயோ??
என் துயில் உருவி துகிலென
நின் மேனி போர்த்திக்கொள்வதில்
அப்படி ஒரு மோகமோ???//

புதுவடிவில் புனையப்பட்ட வரிகள் அழகோ அழகு,,,, எனக்கு பிடிச்சிருக்கு அனு,,,,,

Anu said...

ரொம்ப நன்றி தமிழரசி ..
///புதுவடிவில் புனையப்பட்ட வரிகள் அழகோ அழகு,,,, எனக்கு பிடிச்சிருக்கு அனு,,,,,
ரசித்தமைக்கு மிக்க நன்றி

நட்புடன் ஜமால் said...

பூந்தளிர்கள் பச்சையம் இழந்துவிட

அவை வேறெங்கோ ஒட்டி கொண்டன

----------

துயில் உருவி - நல்ல சொல்லாடல்

ANU said...

நட்புடன் ஜமால் said...
பூந்தளிர்கள் பச்சையம் இழந்துவிட

அவை வேறெங்கோ ஒட்டி கொண்டன

----------

துயில் உருவி - நல்ல சொல்லாடல்
//// ஜமால் அண்ணா ரொம்ப நன்றி....

ரொம்ப நாளா ஆளையே காணும்???

அண்ணாமலையான் said...

மிக அழகா இருக்கு.. வாழ்த்துக்கள்...

Anu said...

அண்ணாமலையான் said...
மிக அழகா இருக்கு.. வாழ்த்துக்கள்...
///ரொம்ப நன்றி...அண்ணாமலை

Anonymous said...

கண்ணன் வந்தாச்சா....

சிட்டுக்குருவி said...

நல்லா இருக்கு அனு