Wednesday 10 February, 2010

மன முராரி....


ஒற்றை வார்த்தையில் தான் தொடங்கினேன் ..
உனக்கும் எனக்குமான உன்னத உறவின்
இலக்கியத்தை..

அன்னாட்களில்...

நீயோ சுட்டெரிக்கும் சூரியனின் காதலன்...
உன் அனல் தெறிக்கும் வார்த்தைக்கதிர்களை
விரும்பி உட்கரித்து குளிர் ஒளி விசும்
நிலவுத்தோழியாய் நான்....
இங்கனம் அன்றோ  தொடங்கியது...
நம் நட்பின் முதல் அத்தியாயம்..

உன் நட்புவேண்டி நான் 
உனக்கே உனக்காக எழுதிக்காட்டிய
என் உணர்வின் வரிகள் எல்லாம்
உன்னால் விரும்பி சுமந்து கொண்டது
மொக்கை என்ற பட்டத்தை.- எனினும்
என் பேனாவோ..தொடர்ந்து காகிதத்திடம்
சொல்லாமல் இல்லை உன் மீதான நட்பின் ஆழத்தை...

பின்னொரு நாளில்....
இன்று  நீஎழுதிய கவிதை என் கண்ணீரை
வாங்கிக்கொண்டது தோழி என நீ மொழிந்தாய்
உடல் அற்ற காற்றாய் மனம் பறக்க கண்டேன்
உன் முதல் அன்பான வார்த்தைகள் நம்
நட்பு இலக்கியத்தில் பதிவதை எண்ணி..

மழைப்போல் என்றாவது வருவாய் ..
அன்னையிடம் அன்று பள்ளிதனில்
தான் கொண்ட அனுபவம் பகிர்ந்து கொள்ளும்
மழலையாய்  உனக்கான என் பகிர்தலும்
இங்கனமே இருக்கும்..தோழனே....

 உன் கவிதை படித்து உள்ளம் மீட்டும்
இசைக்கான ராகசுரங்கள் நான்...
தேன்பலா  சுவைக்கொண்ட உன் கவிதையின்
ஒவ்வொரு வார்த்தைச்சுளைகளை ரசித்து
உண்ணும் ரசிகை நான் நண்பனே....

இன்னாட்களில்...
ஆதவன் வருகையாய் தினம் உன் வருகை..
என் விரல்களும் காத்திருக்கும் உனக்கான
வார்த்தைகளை தட்டச்சு செய்ய கணினியின்
விரல்களுடன் கைக்கோர்த்தப்படியே..

முதன் முறையாய் உன் குரல் கேட்ட அன்று
உயிர்ப்பித்தேன் மறுமுறையென்றாய்...
நட்பில் ஏதோ நுழையக்கண்டேன்...
மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்க விரும்புவதாய்
சொன்னாய்.. நம் நட்பிலக்கியம் கருகும் வாடையறியாமல்.....

துகில்கொண்டு முகம் மறைக்க பழகிக்கொண்ட
 என்னால் என் உள்ளமதை மறைப்பது எளிதன்று...
உள்ளம் கொண்ட உணர்ச்சின் வடிவாய் நீ...
நட்பின் கற்பை காப்பாற்றும் நோக்கில்
மனமதை கல்லாய் மாற சாபம் கொடுத்த முனியாய் நான்...

10 comments:

அண்ணாமலையான் said...

அழகா இருக்குது.. வாழ்த்துக்கள்...

Anonymous said...

நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதியிருக்கீங்க....

அப்துல்மாலிக் said...

வரிக்கு வரி எதையோ சொல்லத்துடிக்க அதை சொல்லாமலே செல்லும் வ்ரிகள்

வாழ்த்துக்கள்

ANU said...

அண்ணாமலையான் said...
அழகா இருக்குது.. வாழ்த்துக்கள்...

வாங்க அண்ணாமலை

ரொம்ப நன்றி ..

ANU said...

தமிழரசி said...
நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதியிருக்கீங்க....


ஆமாங்க

ANU said...

அபுஅஃப்ஸர் said...
வரிக்கு வரி எதையோ சொல்லத்துடிக்க அதை சொல்லாமலே செல்லும் வ்ரிகள்

வாழ்த்துக்கள்

நன்றி அபு

HP said...

unnai madiri unnudaya linesum iruku so sweett

Hari said...

words are so sweet....:)

சிட்டுக்குருவி said...

கலக்கல் கவிதை

வாழ்த்துக்கள் அனு

அன்புத்தோழன் said...

Romba azhagaa irukku....