Tuesday 19 January, 2010

சுகமா ?? சுமையா ??

விளங்கவில்லை ...

எங்கனம் நுழைந்தாய் நெஞ்சுக்குள் ??

கரும்பாறை மனதில் சவ்வூடு பரவலாய்

கசிந்துருகும் நின் காதல் சுகமா ? சுமையா?

சுகமான சுமையா ? இல்லை சுமையாகிவிட்ட சுகமா ?

சுகம் எனில் பிரிவினில் ரத்த நாளங்களில்

உன் நினைவு முடிச்சுகள் முட்டி மோதி

சுமையாய் ஆனது ஏன் ???

சுமை எனில் உன் காதல் கொண்ட முகம்

நெஞ்சுக்குள் வந்து புரியாத சுகம் தருவதேன் ?

எங்கனம் நுழைந்தாய் நெஞ்சுக்குள் ???

உன்னை உள்ளத்தில் சுமந்ததால் சுகமா

சுகமான சுமையே ...உன்னை மனதில்

சுகமாய் என்றும் சுமப்பேன் --நீ எனை

சுமை என்று வேறு சுகம் நாடி சென்ற போதிலும் .....








8 comments:

நேசமித்ரன் said...

:)

முயற்சிகள் தொடரட்டும்

சொல் தன்னிலை எய்துவதும் கவித்துவம்
ஒரு முதிர்ந்த இலை என தரை சேர்வதும் பருவம் சார்ந்தது மட்டுமல்ல நிறம் மாறுவதும் தானே !

நட்புடன் ஜமால் said...

நீ எனை சுமை என்று வேறு சுகம் நாடி சென்ற போதிலும் ...]]


அட ...

S.A. நவாஸுதீன் said...

சுகமான சுமைகள். சுமையான சுகங்கள். நல்லா இருக்கு கவிதை. ஆமா இது யாருக்கு?.

@நேசன்

நீங்க ஏன் மக்கா நான் தான் ஃபர்ஸ்ட் சொல்லலை.

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் தங்கத்தின் தங்கம்

ANU said...

நேசமித்ரன் said...
:)

முயற்சிகள் தொடரட்டும்

சொல் தன்னிலை எய்துவதும் கவித்துவம்
ஒரு முதிர்ந்த இலை என தரை சேர்வதும் பருவம் சார்ந்தது மட்டுமல்ல நிறம் மாறுவதும் தானே !


//ஏற்றுக்கொள்கிறேன்//

ANU said...

நட்புடன் ஜமால் said...
நீ எனை சுமை என்று வேறு சுகம் நாடி சென்ற போதிலும் ...]]


அட ...
// ஹா ஹா ஹா//

நன்றி ஜமால் அண்ணா..

ANU said...

S.A. நவாஸுதீன் said...
சுகமான சுமைகள். சுமையான சுகங்கள். நல்லா இருக்கு கவிதை. ஆமா இது யாருக்கு?.

@நேசன்

நீங்க ஏன் மக்கா நான் தான் ஃபர்ஸ்ட் சொல்லலை.
// யாருக்கும் இல்லை....

இல்லை யாருக்கோ...//



@நேசன்

நீங்க ஏன் மக்கா நான் தான் ஃபர்ஸ்ட் சொல்லலை.

குசும்பா... நடத்துங்க...

ANU said...

நட்புடன் ஜமால் said...
வாழ்த்துகள் தங்கத்தின் தங்கம்

நன்றி அண்ணா...