Wednesday 11 March, 2009

பாரதி ஒரு கேள்விகுறி

பால் நிலா வெளிச்சம்..ஜன்னல் வழியே அறையில் அடிக்க அதை ரசித்து கொண்டேருந்தவள் மனதில் ஏதோ பயம் அடிக்கடி வந்து போனது .. தூக்கம் வராமல் தவித்தவள் வெளியே வந்தாள். நிலவின் வெளிச்சத்தில் தன்னை முழுமையாக நனைதவள் அருகில் இருந்த ரோஜா செடியை பார்த்தாள்..தென்றலோடு ஏதோ ரகசியம் பேசும் அந்த மலரை உற்று நோக்கியபடி இருந்தாள் ஆனால் மனதில் அந்த பயம் வந்து வந்து போனது. பயமும் எதிர்பார்ப்பும் அதிகரிக்க கடிகாரத்தை விட இவள் மனம் வேகமாக சென்றது .

பின்பு எதோ நினைத்தபடியே...அங்கயே கண் அயர்ந்து போனாள்.

பாரதி.....ஏய் பாரதி ...இன்னும் என்ன தூக்கம் ..என்னமா இங்கேயா தூங்கினா... ஐயோ .. என்ன பொண்ணுமா நீ .சரி ...மணி ஒன்பது வந்து குளிச்சிட்டு ரெடியா இரு சரியானு சொல்லிட்டே போன தன் அம்மாவை பார்த்தாள் ..திடீரென மனதில்

மணி அடிக்க ஐயோ மணி ஒன்பதா ...என்று பதறியபடி மாடி விட்டு இறங்கி...ஓடி சென்றவள் விட்டு வாசலில் இவள் நினைத்த படியே செய்தி தாள் கிடக்க மனதில் பயமும் ஆவலும் அதிகரிக்க பிரிந்து பார்த்தாள் ..எதோ தேடியவள் முகம் அந்த சூரியனை விட பிரகாசிக்க ஹையா ......நான் பாஸ் பண்ணிட்டேன் ....அம்மா

இங்கே வாங்க ...இங்கே பாருங்க நான் பாஸ் பண்ணிட்டேனு குதித்தாள்.

என்ன பாரதி இதுல என்ன அதிசயம் என் பொண்ணு எப்பவும் பாஸ் தானே .சரிமா நேரம் போகுது குளிச்சிட்டு ரெடியா இரு ..இன்னைக்கு உன்னை பாக்க சென்னைல இருந்து நம்ம விசாலம் அத்தையோட சொந்த காரங்க வராங்க . அம்மா அவுங்க எதுக்கு வராங்க நான் பாஸ் பண்ணியதுக்கு மாலை போட வரங்களா ... ஐயோ எனக்கு எதுக்குமா இந்த மாலை மரியாதை...வேண்டாம் வேண்டாம் இதுலாம் பாரதி வாழ்கையிலசகஜம்

என்று விளையாட்டாக சொல்லி சிரித்தவள் அடுத்து ,பாரதி உன்னை அவுங்க பொண்ணு பாக்க வாரங்கமா என்று சொன்ன அவள் அமமா சொன்னதும்

அதிர்ச்சியில் உறைந்து பின்பு எரிமலையாய் மாறி என்ன இது நான் இப்போ தான் பன்னிரண்டு பாஸ் பண்ணி இருக்கேன் இன்னும் நிறைய படிக்கணும் ..நல்ல படிச்சு நல்ல ஒரு வேலைக்கு போகணும் .அப்புறம் பார்த்துக்கலாம். பாரதி இங்கே பாருமா அம்மா சொன்ன கேட்கணும் .அம்மா சொன்ன கேட்பேன் ஆனா ந கிட்ட கேட்காம நீங்க இப்படி ஏன் பன்னுறேங்க . சாரி மா என்னால முடியாது காம்பெல் பண்ண வேண்டாம் . இல்லை பாரதி நீ சின்ன பொண்ணு உன் அப்பா வருவதுக்கு முன்னாடி ரெடியா இருன்னு போன அம்மாவையே பார்த்தவளின்

மனதில் ஏதோ தோன்ற உறுதி கொண்டவளாய் தன் அறை நோக்கி நடந்தவள் கதவை தாளிட்டு படுகையில் சரிந்தாள் .பாரதி ....பாரதின்னு ..யாரோ கதவை தட்டும் ஓசை கேட்க மெதுவா கதவை திறந்து விசாலம் அத்தையின் சிரிப்பையும் மலர்ந்த முகமும் என்றும் இல்லாமல் இன்று எரிச்சல் உட்ட அதை வெளி கட்டாமல் வாங்க அத்தை ..நல்ல இருக்கீங்களா மாமா நலமா ? ஆமாமா எல்லோரும் நலம் .நீ ஏன்மா இன்னுமா உன்னை பார்க்க என் அக்காவும் மாமாவும் அப்புறம் அவுங்க பையனும் வந்திருகாங்க சிக்கிரம் ரெடியா இருமா

சரிங்க அத்தை நான் இப்போ ரெடி ஆகிடுறேனு சொல்லி சிரித்தவள் நெஞ்சில் எதோ திட்டம் இருந்தது .......( மீண்டும் வருவாள் ...)

குறிப்பு : நண்பர்களே ...இது வரை என் மொக்கை கவிதையால் உங்களை இம்சை படுத்திய நான் இன்று "பாரதி ஒரு கேள்வி குறி " என்ற கதை போட்டு உங்களை இம்சை படுத்த ஆரம்பித்து விட்டேன் ..எப்போது போல உங்கள் ஒட்டு வேணும் ...நன்றி ..ஹா ஹா ஹா

4 comments:

நட்புடன் ஜமால் said...

ஏதோ சொல்ல வாறியள் ...

Thilak said...

WOW... yaroda Kadthai ethu...Sollunga, sollunga!

ராம்.CM said...

எப்படிப்பட்ட கவிதை போட்டாலும் அதை படிக்க நானிருக்கிறேன்!

Thilak said...

Waiting for the next episode!
Yaroda Kadhai ethu mmmmmmmm???