Thursday 27 May, 2010

தற்(கரு)க்கொலை  


எனக்காக உன்


உயிர் கொடுப்பேன் என்றாய் அங்கனமே 

என் வயிற்றில் உயிர் கொடுத்தாய் ..

கொடுத்திட்ட உயிரை தொலைக்க சொல்கிறாயே

பிழை என்று அழித்திட கருவறை ஒன்றும்

கரும்பலகை அல்லவே??

தாய் பால் குடிக்கும் முன் கள்ளிப்பால்

கொடுக்க சொல்லும் நின் கருணை என்ன சொல்வேன்

என்னுடல் சுவைத்திட்ட நின் காதல் பொய்யாகலாம்

என்னுள் சுவாசிக்கும்  நின் மழலை மெய்யன்றோ?



ஜீவன் கொன்று என் ஜீவிதம் காண சொல்கிறாய்

மழலைக்கு ஏங்கியவளிடம் கருவறுக்க சொல்லுதல்

எங்கனம் நியாயம் ???நின் வாழ்வு எண்ணி எனை

பாவியாக்குதல் முறைதானோ?



உரிமையாய் கேட்டிட என்கொன்றும் இல்லை

முறையான முகவரி ....நின்னிடத்தில்

முறையின்றி வந்ததால் முத்தாய் தவழ்ந்திடும்

நின் மழலையின் மூச்சடுக்குதல் என்னால்

முடிந்துடுமோ ??

ஊரார் பலித்திடும் முன்னே என் ஜீவன்

உறைந்திடும் மண்ணில் நிம்மதியை நாடி

தவறொன்றும் செய்திடவில்லை நாங்கள்...

எனினும் விரைவில்

மரணத்தின் வாசம் சுவாசிக்கும்

ஆசையில் நொடிகளை கடக்கும்

என்னுடன் என் மழலையும்


5 comments:

நேசமித்ரன் said...

நல்லா இருக்குங்க

ஆனா ரொம்ப நீளமா இருக்கு கொஞ்சம் எடிட் பண்ணலாம்னு நினைக்கிறேன்

ANU said...

நேசமித்ரன் said...
நல்லா இருக்குங்க

ஆனா ரொம்ப நீளமா இருக்கு கொஞ்சம் எடிட் பண்ணலாம்னு நினைக்கிறேன்
// எடிட் பண்ணனும்னு நினைக்கிறேன்...ஆனா எப்படி பண்ணனு தெரியலை மித்ரா//

பாலா said...

ennamo ponga nalla irunga

சிட்டுக்குருவி said...

கவிதையா? கண்ணீரா???

சொல்லத்தெரியலை

Thamarai Selvan said...

karuvukku uyir koduppadha kaadhal? idhu kaadhal illai,

ivargal konda ________kku vilai, oru kulandhaiyin uyir..

appadi oru ____ thavai dhana??

kanketta pin sooriya namaskaram yedharkku,