Thursday 17 December, 2009

அக்னிக்குஞ்சு

காலை பொழுதின் சுறுசுறுப்பில் தொலைப்பேசியின் அழைப்பு ஒலிகளிலும்கணிணியின் தட்டச்சு ஒலிகளிலும் அலுவலகம் தனக்கே உரிய பரபரப்பில் நிரம்பி இருந்தது...அன்றய அலுவலக வேலையில் ஊறியவள் மனதில் திடீரென பிரவின் காலையில் தன்னிடம் சொல்லிய வார்த்தைகள் அலைமோதியது. பாரதி ... நல்ல யோச்சு பாரு....எனக்காக உன் வாழ்க்கையை கெடுத்துகாதே...இதுல எனக்கு வருத்தம் எதும் இல்லை நீ சந்தோஷமா இருக்கனும் அதுதான் உன்கிட்ட நான் வச்சிருக்கிற அன்பிற்க்கு அர்த்தம்னு இனிய அமில வார்த்தைகளை உதிர்த்து சென்ற பிரவினை எண்ணி கலங்கினாள்.....சில நொடிகளில் பட்டு விட்ட செடியில் துளிர்த்த இளம்தளிராய் எண்ணம் உதிக்க ஒரு முடிவுக்கு வந்தாள்..அன்றய வேலைகளை முடித்தவள் ரிப்பேர்ட்டுக்களை தன் மேனெஜரிடம்கொடுத்துவிட்டு அதனுடன் ஒரு காகிததையும் நீட்டினாள். என்ன பாரதி இது?? லீவு அப்பிளிக்கேசன் கொடுத்திருக்க..ஏதாவது பிரச்சனையா??வாட்ஸ் த பிராபளம் ???சிறு புன்னகை உதிர்த்தவள் ஸார் என் ஃபெமிலில ஒரு ப்ராபளம் ...கொஞ்சம் சிவியர்.. நான் கண்டிப்பா ஊருக்கு போய் ஆகனும்வில் யு ப்ளிஸ் அக்செப்ட் மை லீவ்.....ஓகே பட் ஒன்லி 15 டேய்ஸ் என்று கைஒப்பம் இட்டவரிடம் தேங்யூ ஸார் என்று துளிர்த்த கண்ணிரை மறைத்து கொண்டு இருக்கைக்கு விரைந்தாள்....வானம் கரிய உடை மாற்றி கொண்டிருந்தது ...அழைப்பொலியின் சத்தம் கேட்டு கதவை திறந்தவள் குழந்தை புன்முறுவல் உதிர்த்த பிரவினிடம் இருந்து லெப்டாபை வாங்கிகொண்டு என்ன இன்னைக்கும் டிராபிக் தானாஎன்று கிண்டலாக கேட்டு சிரித்த வாறு லெப்டாப்பை மேஜையில் வைத்தாள். அழகிய இள்ம் நீல உடைக்கு மாறி இருந்தான் பிரவீன்.சுவற்றில்மாட்டியிருந்த தொலைக்காட்சிப்பெட்டிக்கு உயிர்க்கொடுத்தவன் பாரதிக்கொடுத்த காபியை வாங்கினான்..என்ன பாரதி இன்னைக்கு ஆபிஸ்ல வேலை அதிகமா?? எப்பவும் போல தாங்க ..உங்களுக்கு எப்படி பிரவீன்?.இன்னைக்கு கொஞ்சம் அதிகம் தான்டா...காபியை உறிஞ்சி தொண்டைக்கு அனுப்பி விட்டு ..சரிமா...மறுபடி அதே பற்றி பேசுறென்னு நினைக்காதே..காலையில சொன்னதை பற்றி என்ன முடிவு எடுத்திருக்க ??? ஓ.அதுவா நான் கூட நல்லா யோசிச்சு பார்த்தேன்..எனக்கும் நிங்க சொல்லுறதுல நியாயம் தோனுது...சோ...நான் ஒரு நல்ல முடிவுக்கு வந்துடேன் ...என்ன முடிவுடா...உங்கள விட்டு உடனே பிரியனும்னா முடியாதுங்க...என் மனசு சரியில்ல பிரவீன்... நான் ஒரு இரண்டு மூனு நாளைக்கு என் வீட்டிற்கு போய்ட்டு வரட்டுமா... வந்தவுடன் இதுக்கு ஒரு நல்ல முடிவை எடுக்கலாம்... ஓகே டா.எதுப்பற்றியும் கவலைப்பாடாதே என்றான் நெஞ்சுக்குள் மரணித்தவாறு...... இரவில் தூங்காமல் ...புரண்டவன் அருகே தூங்கும் பாரதியைப் பார்த்தான்என்னை விட்டு போறியா பாரதி...கண்ணீர் துளிகள் நெஞ்சின் வலியை உணர்த்த அப்படியே துங்கினான்...அவள் எடுக்கவிருக்கும் உயிர் பதற வைக்கும் முடிவை அறியாமல்.....

( அது என்னவா இருக்கும் எதுக்கு முடிவு????தொடரும்.....)

1 comment:

shakthikumar said...

miguntha ethipaarpodu thodarum nu pottu teenga , paavam bharathi
uyir pathara vaikkum mudivulaam vendaam ellorum santhosha padara maathiri nalla mudivaa podunga.