Thursday 24 December, 2009

அக்னிக்குஞ்சு --பாகம் 3

அன்னையை பிரிந்த மழலையாய் வாடினான்..பிரவின்..சுவற்றில் கடிகாரம் மணி 8 என்று சொல்லிக்கொண்டிருந்தது..ஐய்யோ இப்பவே மணி 8 ஆச்சே.. 10 மணிக்கு கடைசி ட்ரெயின்..அதை விட்டா நாளைக்கு தானே இருக்கு.. நினைக்கும் போதே உடம்பில் இரத்தம் அதி வேகமாக ஓடுவதுப்போல இருந்தது அவனுக்கு.,,உடனே தன் நண்பனுக்கு போன் செய்தான் டேய் சக்தி நான் உடனே சென்னை போகனும் 10 மணிக்கு இருக்கிற மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கெட் புக் பண்ணு பிளிஸ்டா.. ஹேய் என்னடா ஆச்சு...ஏன் டென்சனா இருக்க..??பிரவின் சொன்னது கேட்டு என்னடா நீ இப்படி பண்ணிட்டா..சரி பயப்படாதே ..பாரதிக்கு ஒண்ணும் ஆகாது..அவ புத்திசாலி பொண்ணுடா..கவலைப்படாதே நான் டிக்கெட் புக் பண்ணிட்டு உன்னை வந்து கூட்டிட்டு போறேன் ஓகே.. ஓகேடா..தொலைப்பேசி சக்தி இழந்தது..

என்ன செய்வது என்று தோன்றவில்லை பிரவீனுக்கு..அப்படியே படுக்கையில் விழுந்தான்.. கட்டில் அருகே இருந்த புகைப்படத்தில் அவன் பிறந்த நாளைக்கு தனக்கு கேக் ஊட்டியப்படி இருந்த பாரதியின் புன்னகை இவனது மனதில் இன்னும் வழியை ஏற்படுத்தியது.அழுதான்.. பாரதி என்னை மன்னிச்சுடு என்னை விட்டு போய்டாதே... நீ இல்லனா நானும் இல்லை...

வீட்டின் முன்னே கார் வந்து நிற்கும் ஓசை கேட்டு எழுந்தவன் சன்னல் வழியே பார்த்தான் சக்தி காரிலிருந்து வெளியே இறங்கினான். முகத்தை துடைத்துவிட்டு கதவை திறந்தான். என்னடா நீ இன்னும் புறப்படலையா இப்போ மணி 9 ஆகுது.. 10 மணிக்கு ட்ரெயின்..இதோ இப்போ ரெடி ஆகிடுறேன்.. சரி நீ போய் முகம் கழுவிட்டு ரெடி ஆகு நான் உன் திங்ஸ்லாம் எடுத்து வைக்கிறேன்..

தென்றலே நீ வந்ததேனடி என் கண்ணிலே ..... செல்போன் பாடியது..சக்தி எடுத்து ஹேலோ...யாருங்க .. நான் தான் பாரதியோட அப்பா பேசுறேன் ...ஓ.. நீங்களா..பாரதி எப்படி இருக்கா அப்பா.. நான் தான் சக்தி பேசுறேன்... அவர் சொன்னது கேட்டு அதிர்ந்து போனான்.சக்தி.
பிரவின் தயாராகி வந்துக்கொண்டிருந்தான். யாருடா ?? பாரதியோட அப்பாடா.. என்னாச்சு அவளுக்கு என்ன சொன்னார்? இல்ல நீ புறப்பட்டாச்சானு கேட்டார்டா...இன்னும் 3 மணி நேரத்தில் அங்கே இருப்போம்னு சொன்னேன்.. வேறு எதும் சொல்லலையா ??இல்லடா ஓகே போலாமா??சரிடா...


ரெயில் நிலையம் வரை இருவரிடம் மொளனமே நிலவியது. பயணிகள் கவனத்திற்கு சென்னை வழியே மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் தடம் எண் 3 நோக்கி
வந்துகொண்டிருக்கிறது. அழகான குரல் அறிவித்துகொண்டிருந்தது. நல்ல வேளை சரியான நேரத்திற்கு வந்தோம். பிரவின் தனக்கு பதிவு செய்த இருக்கையில் போய் இருந்தான். சக்தியும் அவனருகே போய் இருந்தான்.
ரொம்ப நன்றிடா சக்தி நீ இல்லைனா இன்னைக்கு நான் போகமுடியாது.ஹேய் என்னடா நீ நன்றிலாம் சொல்லிகிட்டு.ட்ரெயின் மெதுவாகா நகர்ந்தது..சரிடா நீ போ சக்தி ..ட்ரெயின் மூவ் ஆகுதுல... உன்னை இப்படி விட்டுட்டு எப்படிடா என்னால போக முடியும் எனக்கும் சேர்த்து தான் டிக்கெட் எடுத்தேன்.பிரவின் மொழியின்றி கண்ணில் நீர் தழும்ப சக்தியை பார்த்தான்..


என்னடா நீ சின்னப்புள்ளப் போல ..ஆபத்துல உன்கூட இல்லைனா நான் என்னடா ஃப்ரெண்ட்..கண்ணை துடைத்து தன் மேல் சாய்த்துக்கொண்டான்.. ட்ரெயின் வேகமாக சென்றுக்கொண்டிருந்த்து. பக்கத்து இருக்கையில் வயதான ஒருவர்..பகவத்க்கீதையில் கண்ணன் அர்ச்சுனன்னுக்கு வழங்கிய கீதா உபதேசம் படித்துக்கொண்டிருந்தார்.

பிரவின் இந்தா காபி சாப்பிடுடா..இல்லை வேண்டாம்டா.. நீ எதும் சாப்பிட்டு இருக்க மாட்டனு தெரியும் அதான் நானே அபிட்ட சொல்லி உனக்கு காபியும் ,தோசையும் செய்து கொண்டு வந்திருக்கேன்..சாப்பிடு..சக்தியின் வற்புறுத்தலில் காபி மட்டும் குடித்தான். உள்ளம் கொண்ட சோர்வு அவனை தூக்கதிற்கு அழைத்து சென்றிருந்தது அவனை எண்ணி வருந்தியவனாக மேலும் வற்புறுத்த விரும்பாமல் மொளனம் காத்தான்

ட்ரெயின் சென்னை ரெயில் நிலையத்தை அடைந்துகொண்டிருந்த்து..பிரவின் வா சென்னை வந்தாச்சு..அவனது படப்படப்பு இன்னும் அதிகமானது..ஏண்டா பாரதிக்கு எதாவது ஆகி இருக்குமா?? ஒண்ணும் இல்லை இப்போ தான் அவ அப்பாக்கு கால் பண்ணுனேன். அவர் இங்கே நம்மை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போக கார் அனுப்பி இருக்கேனு சொன்னார்.

அவர்களுக்காக காத்திருந்த காரில் ஏறினார்கள். ஒரு 20 நிமிடங்களில் G.K ஹாஸ்பிட்டல் முன்பு கார் ஒரு பெருமுச்சுவிட்டப்படி நின்றது. பாரதி இருக்கிறது நம்பர் 405 8வது மாடி நாம லிப்டில் போகலாம் சக்தி. ஓக்கே டா...லிப்டில் ஏறி 8வது மாடியை அடைந்து ரூம் நம்பர் 405 க்கு போனார்கள். அங்கே பாரதியின் அம்மா கண்கள்
கலங்கியப்படி நின்றுக் கொண்டிருந்தாள். என்னாச்சு அத்தை..பாரதி எங்கே??..வாப்பா...பிரவின் என்னை என்ன சொல்ல சொல்லுறிங்க ..இந்த பொண்ணு இப்படி ஒரு முடிவை எடுக்கும்னு யாரும் எதிர்ப்பார்க்கல....


( என்ன நண்பர்களே....அப்படி என்னத்தான் முடிவு எடுத்திருக்கும் அந்த பாரதி பொண்ணு??? உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க....தெரியாதவர்களுக்கு விடைச்சொல்ல நாளை வருவாள் பாரதி....)
தொடரும்........

4 comments:

நட்புடன் ஜமால் said...

சீக்கிரம் சொல்லுங்க

கதையோட்டம் செம சிறப்பு

Unknown said...

m ethirpaarpoduthaan mudikareenga.
enakku nallaa theriyum enna mudivu eduthiruppaangannu ana solla maattean,entha pennum seiya thayangum vishayam unmaile bharathi great.

Anu said...

நட்புடன் ஜமால் said...
சீக்கிரம் சொல்லுங்க

கதையோட்டம் செம சிறப்பு
solluren soluren ....hahhahahah

Anu said...

shakthi said...
m ethirpaarpoduthaan mudikareenga.
enakku nallaa theriyum enna mudivu eduthiruppaangannu ana solla maattean,entha pennum seiya thayangum vishayam unmaile bharathi great.

OHHHHHHHHHHHHHHHHH....??