Wednesday 17 June, 2009

போராளிகள் ..


விரும்பி மனதொன்று பட்டும்


சில நேரம் கடமைக்காகவும் ...


உறவு உருவாகிட உட்சம்


காணும் போராட்டம் நமக்குள்


அவ்வப்போது ........


முத்து விளைவிக்கும் முயற்சியில்


தொடர்ந்து தோல்வி அடைந்தும்


நானும் நீயும் தீவிரமாய் போராடும்


தீவிரவாதிகளாக ....


மூச்சடக்கி என்னுள் செலுத்திய


ஒவ்வொரு துளிகளும் உதிரமாய்


உருமாறி கரைந்து போகும் நேரம்


என் உயிரும் உருகி ஓடும் .....


ஒன்றாய் இருவரும் உருவாக்கிய


(குழந்தை ) கனவை என் அனுமதின்றி


கலைக்கும் கொடூர ஊடகமாக நான்.....



வாரிசு வேண்டி போக இன்னும்


எதாவது ஆலயம் உண்டா என


வரைபடம் தனில் கோலமிடும்


என் விரல்களும் விக்கித்து


ஏதும் இல்லை என்ற முடிவில்


பெருமுச்சு விடும் .



தண்ணீர் கனவுகள் சுமந்த படி


கண்ணீர் வடிக்கும் என் விழிகளும்


தீரா சுமை கொண்ட என் மனதும்


உடன்படிக்கை கொண்டு இந்த


உறவுகள் எல்லாம் தொலைத்து


மோட்சம் அடைய வேண்டி


ஆசை துறந்த துறவியாக மாறிட


சொல்லும் .மெதுவாக எண்ணங்கள்


அவ்வழியே சென்றுவிடும் .....



முடிவுடன் நான் வெளியேறும் வேளையில்


சுவற்றில் புன்னகையுடன் நோக்கும்


குழந்தையின் சித்திரம் கண்டு சுக்கை


போல் சிதைந்து ஓடும் என் சிந்தனைகளும்...


இன்னும் எத்தனை காலம் இந்த


உயிர் பிழியும் சோதனைகள் என்ற


வேதனையுடன்


இதோ மீண்டும் அடுத்த போராட்டத்திற்கு


ஆயுதமனவர்களாக .......




16 comments:

shakthikumar said...

வாரிசு வேண்டி போக இன்னும்



எதாவது ஆலயம் உண்டா என



வரைபடம் தனில் கோலமிடும்



என் விரல்களும் விக்கித்து



ஏதும் இல்லை என்ற முடிவில்



பெருமுச்சு விடும் .

romba nallaa irukku azeez unarvu pooravamaana kavithai

shakthikumar said...

ennavo pannuthu kavithai thuyaramaa varuthamaa onnume puriyalai kavithaila illai manasila

பாலா said...

எழுத்துப்பிழை இருக்கிறது பார்த்துக்கொள்ளவும்
வார்த்தைகள் தான் அதிகமா இருக்கு. இன்னம் நிறைய
சொல்லலாம் .
முதல் பாதி ஓகே
அடுத்த பாதி தான் கொஞ்சம் செதுக்கணும்


பின்னூட்டம் தவறென்றால் விமர்சிக்கவும்

பாலா

sakthi said...

விரும்பி மனதொன்று பட்டும்
சில நேரம் கடமைக்காகவும் ...
உறவு உருவாகிட உட்சம்
காணும் போராட்டம் நமக்குள்
அவ்வப்போது ........
முத்து விளைவிக்கும் முயற்சியில்
தொடர்ந்து தோல்வி அடைந்தும்
நானும் நீயும் தீவிரமாய் போராடும்
தீவிரவாதிகளாக ....

என்னடா இப்படி ஒரு விரக்தியான கவிதை

நட்புடன் ஜமால் said...

முத்து விளைவிக்கும் முயற்சியில்
தொடர்ந்து தோல்வி அடைந்தும்
நானும் நீயும் தீவிரமாய் போராடும்
தீவிரவாதிகளாக ...\\

இதை உணர்ந்தவன் ...

Anonymous said...

வார்த்தைகளோடு உயிரும் உருகுகிறது.....

நெகிழ்ச்சி நெகிழ்ச்சி நெகிழ்ச்சி....

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு Azeez.

வேத்தியன் said...

நல்லாருக்கு பாஸ்...

Anu said...

வேத்தியன் said...
நல்லாருக்கு பாஸ்...

thanks vethiyan paratiyamaikku

Anu said...

S.A. நவாஸுதீன் said...
ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு Azeez.

unarvu neeranthathaal

Anu said...

தமிழரசி said...
வார்த்தைகளோடு உயிரும் உருகுகிறது.....

நெகிழ்ச்சி நெகிழ்ச்சி நெகிழ்ச்சி....

uyir uruki paesum oru pennin unarchi tamirasai

Anu said...

நட்புடன் ஜமால் said...
முத்து விளைவிக்கும் முயற்சியில்
தொடர்ந்து தோல்வி அடைந்தும்
நானும் நீயும் தீவிரமாய் போராடும்
தீவிரவாதிகளாக ...\\

இதை உணர்ந்தவன் ...

jamal anna mudivil vetri thane ...

Anu said...

sakthi said...
விரும்பி மனதொன்று பட்டும்
சில நேரம் கடமைக்காகவும் ...
உறவு உருவாகிட உட்சம்
காணும் போராட்டம் நமக்குள்
அவ்வப்போது ........
முத்து விளைவிக்கும் முயற்சியில்
தொடர்ந்து தோல்வி அடைந்தும்
நானும் நீயும் தீவிரமாய் போராடும்
தீவிரவாதிகளாக ....

என்னடா இப்படி ஒரு விரக்தியான கவிதை

shakthi ma ithu virakthiya ila uyir urukum valiyaanu sola theriyala

Anu said...

பாலா said...
எழுத்துப்பிழை இருக்கிறது பார்த்துக்கொள்ளவும்
வார்த்தைகள் தான் அதிகமா இருக்கு. இன்னம் நிறைய
சொல்லலாம் .
முதல் பாதி ஓகே
அடுத்த பாதி தான் கொஞ்சம் செதுக்கணும்

saringa ayaaa ...adutha murai thiruthi kolkiraen

Anu said...

shakthi kumar said...
ennavo pannuthu kavithai thuyaramaa varuthamaa onnume puriyalai kavithaila illai manasila


athu than feelingsuuuu hahahahhahah

Thilak said...

romba nalla irukku...
to be honest 1st time yenakku sariya purialai... after reading the comments went back and read again...nalla irukku...