Friday 12 June, 2009

எதிர்பார்ப்பு ...


பிரிதலால் கொண்ட தேடலின்ஒவ்வொரு

மணித்துளிகளும்எதிர்பர்ப்புகளாய்

என் இதய அறையில்ஒன்றின் மேல் ஒன்றாய் ...

எனையும் அறியாமல் படிந்தும்

அரித்து கொண்டிருக்கும் படிகங்கலாய் .....

தினமும் என் கனவுகளின்

நான் வளர்த்த உன்மீதான காதலின்

நரம்புகளை துளைத்து உயிர்

குடிக்கும் ஒட்டுண்ணிகளாக.......
மரணத்தின் சுகம் தரும் உன்னை நீங்கிய
ஒவ்வொரு நொடிகளும் .....


காத்திருத்தலில் முடிவாக உன்வருகை
பார்த்தவுடன் அன்னையை கண்ட
குழந்தையாய் உன்னில் பரவசமாய்
ஒட்டி உறவாடிட நிமித்தம் .


மனதில் படிந்திருந்த ஒவ்வொரு

எதிர்பார்ப்புகளும் ஒன்றை ஒன்று

முந்தி வெளி வர நினைத்து

தம்முள் போராடும் வேளையில் ...
நீயோ என்னை பார்த்தும் பாராமல்
சுவற்றில் ஒட்டி இருந்த
தொலைக்காட்சியில் மனம் தொலைக்க.....


அமைதி காத்திருந்த என் ஒவ்வொரு
எதிர்பார்ப்புகளும் தயக்கமின்றி
தற்கொலை தீவிரவாதிகளாக
உருமாறி வார்த்தை அனல்
அணுகுண்டுகளை சுமந்தவண்ணம்
உன் மீது மோதி வெடித்து சிதற ....


வலிதாங்காது வேதனையுடன் நீ
அமைதியுடன் என் மீது பார்வைதனை
செலுத்த .....
உன்மீதான என்னுடைய கோபத்தின்
தாக்கம் சில நொடிகள்தான் ...
வலிசுமந்த உன் சுவாசம் பட்டு
பேசாமல் கண்ணீருடன் வழியனுப்பும்
என் கோப அரக்கனையும் தான் ......
போராட்டத்தின் விளிம்பில் நம்முள்
மையான அமைதி நிலவ..
கண்ணீர் சுட்ட என் கன்னங்களில்
ஒத்தடம் கொடுக்கும் நிமித்தம்
உன் இதழ்கள் பட்டதும் ,,,
பீறிட்டு வரும் கண்ணீரில்
என் எதிர்பார்ப்புகளும் சூரியன்
தரிசனம் கொண்ட பனித்துளியாய்
கரைந்து மறைந்து போனது .....
மொழி இருந்தும் மொழி இன்றி பேச

தொடங்கும்உன் எதிர்பார்புகளுடன் என் மனமும்..
இதோ என் கோபத்தின் கல்லறையில்
சிறு மொட்டின் பூக்கும் போராட்டம்.......

14 comments:

நட்புடன் ஜமால் said...

தினமும் என் கனவுகளின்

நான் வளர்த்த உன்மீதான காதலின்

நரம்புகளை துளைத்து உயிர்

குடிக்கும் ஒட்டுண்ணிகளாக...\\

வரிகள் சற்றே கடினமாய் இருப்பினும் காதலாய்

நட்புடன் ஜமால் said...

மனதில் படிந்திருந்த ஒவ்வொரு

எதிர்பார்ப்புகளும் ஒன்றை ஒன்று

முந்தி வெளி வர நினைத்து

தம்முள் போராடும் வேளையில் ...
\\

இரசித்தேன் ...

நட்புடன் ஜமால் said...

கண்ணீர் சுட்ட என் கன்னங்களில்
ஒத்தடம் கொடுக்கும் நிமித்தம்
உன் இதழ்கள் பட்டதும் கண்ணீர் சுட்ட என் கன்னங்களில்
ஒத்தடம் கொடுக்கும் நிமித்தம்
உன் இதழ்கள் பட்டதும்\\

நல்ல (ஓத்)தடம்

நட்புடன் ஜமால் said...

மொழி இருந்தும் மொழி இன்றி பேச


மிகவும் அருமை ...

rose said...

மரணத்தின் சுகம் தரும் உன்னை நீங்கிய
ஒவ்வொரு நொடிகளும் .....
\\
arumaida

rose said...

இதோ என் கோபத்தின் கல்லறையில்
சிறு மொட்டின் பூக்கும் போராட்டம்.......
\\
irasitha varikalda

Anu said...

நட்புடன் ஜமால் said...
தினமும் என் கனவுகளின்

நான் வளர்த்த உன்மீதான காதலின்

நரம்புகளை துளைத்து உயிர்

குடிக்கும் ஒட்டுண்ணிகளாக...\\

வரிகள் சற்றே கடினமாய் இருப்பினும் காதலாய்

kathal kadinamana ondru
mutkal mael pathaikanikkai

Anu said...

நட்புடன் ஜமால் said...
மனதில் படிந்திருந்த ஒவ்வொரு

எதிர்பார்ப்புகளும் ஒன்றை ஒன்று

முந்தி வெளி வர நினைத்து

தம்முள் போராடும் வேளையில் ...
\\

இரசித்தேன் ...

nandri Jamal anna

Anu said...

rose said...
இதோ என் கோபத்தின் கல்லறையில்
சிறு மொட்டின் பூக்கும் போராட்டம்.......
\\
irasitha varikalda
thank you rose

Anu said...

rose said...
இதோ என் கோபத்தின் கல்லறையில்
சிறு மொட்டின் பூக்கும் போராட்டம்.......
\\
irasitha varikalda
thank you rose

பாலா said...

மொழி இருந்தும் மொழி இன்றி பேச


mmmmmmmmmmmmmmmmmmmmm

pesu pesu nee enna pesunalum enakku puriyum

பாலா said...

en ippadi thodarnthukitte pora athu oru maathiri aayasaththai kodukkirathu

anganga mudisidu appathaan azhagu

sakthi said...

வலிசுமந்த உன் சுவாசம் பட்டு
பேசாமல் கண்ணீருடன் வழியனுப்பும்
என் கோப அரக்கனையும் தான் ......

mmmm

arumai

sakthi said...

மொழி இருந்தும் மொழி இன்றி பேச தொடங்கும்உன் எதிர்பார்புகளுடன் என் மனமும்..
இதோ என் கோபத்தின் கல்லறையில்
சிறு மொட்டின் பூக்கும் போராட்டம்....

pinrenga azee