Monday 8 June, 2009

மனிதாபிமானம் கிலோ எத்தனை ரூபாய்????

அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது
அறிந்தோ அறியாமலோ அன்னையும் ஈன்றதால்
மனிதனாக பிறந்து விட்டோம் மண்ணில் ....
மலைஜாதி மக்கள் என பெயரும் பெற்று கொண்டோம் .

பாசியையும் ஊசியையும் விற்கும் எங்கள்
குழந்தைகள் பள்ளிக்கு சென்றால் புழுவை
போல் பாவிக்கும் உயர்ந்த மனிதர்கள்
இவர்கள் இகழ்ச்சியால் சிதைந்தது
எங்கள் பிஞ்சுகளின் நெஞ்சங்களும் ....

இயற்கை அன்னை மடியில் ஒன்றி வாழும்
எம்மை அடிக்கடி உரசி பாக்கும் சில
நாகரிக கோட்டான்கள் ...உயிர் பறிக்கும்
முயற்சியில் அயரமால் உழைக்கும்
உத்தம புத்திரர்கள் ..

மலையில் பிறந்ததால் மக்கள் இல்லை
மாக்கள் என நினைத்து சூறையாடும்
செல்வசீமான்கள் ... மாக்களுக்கும்
இதயம் இருக்கின்றதே பசிக்காமல்
புசிக்க எண்ணாதே ...ஆறறிவு படைத்த
மனிதனே இன்னும் எத்தனை உயிர்
குடித்தால் உன் பசி அடங்கும் ???

எங்கள் குடில்கள் எரித்து எங்கள் வாழ்கையை
கொன்று சமாதியாகி எங்கள் கனவு கல்லறையின்
மேலே உங்கள் தொழிற் சாலை கட்டிட அஸ்திவாரம் மிடும்
மனிதன் எனப்படும் கண்ணில் தோன்றும் அசுரர்களே

கொன்றால் பாவம் தின்றால் போகும் என்பதை
தவறாக நெஞ்சில் கொண்டு எங்கள் மக்களை
கொன்று நட்சத்திர விடுதியில் ஓய்யாரமாய்
விருந்து உண்ணும் மாமிச பிண்டங்களே

நாங்களும் மனிதர்கள் தான் . இன்னும் எத்தனை
நாட்கள்தான் இந்த குருதி குடிக்கும் கொடுர தாகம் ???
உங்களுக்கான எனது ஒரே கேள்வி
மனிதாபிமானம்
எங்கு கிடைக்கும் கிலோ எத்தனை ரூபாய் ???

( நேற்று செய்திகள் பார்த்த போது கொட்டங்கி என்னும் கிராம மலைவாழ்
மக்கள் குடில்கள் தொழிற்சாலை அமைப்தற்காக எரிக்க பட்டது )









17 comments:

shakthikumar said...

romba nallaa irukku azee

shakthikumar said...

பாசியையும் ஊசியையும் விற்கும் எங்கள்
குழந்தைகள் பள்ளிக்கு சென்றால் புழுவை
போல் பாவிக்கும் உயர்ந்த மனிதர்கள்
இவர்கள் இகழ்ச்சியால் சிதைந்தது
எங்கள் பிஞ்சுகளின் நெஞ்சங்களும் ....

unmaile kodumai azeez makkalukku ippolaam manithaabimaanam manathai vittu thaanduvathillai

shakthikumar said...

கொன்றால் பாவம் தின்றால் போகும் என்பதை
தவறாக நெஞ்சில் கொண்டு எங்கள் மக்களை
கொன்று நட்சத்திர விடுதியில் ஓய்யாரமாய்
விருந்து உண்ணும் மாமிச பிண்டங்களே

anal therikkum varigal anaal avasiyamaana varigal

shakthikumar said...

"மனிதாபிமானம் கிலோ எத்தனை ரூபாய்????"

vithaalum yaarume vaanga maattaanga azeez

பாலா said...

rovuththiram pazhakureyo???
mmmmmmmmmmmm

நட்புடன் ஜமால் said...

மாக்களுக்கும்
இதயம் இருக்கின்றதே பசிக்காமல்
புசிக்க எண்ணாதே\\


மாக்களுக்காவது ...

நட்புடன் ஜமால் said...

உங்களுக்கான எனது ஒரே கேள்வி
மனிதாபிமானம்
எங்கு கிடைக்கும் கிலோ எத்தனை ரூபாய் ???
\\

கேள்வி சரி ...

கேட்க்கப்படும் இடம் தவறு

நட்புடன் ஜமால் said...

நல்ல உணர்வு கவிதை.

S.A. நவாஸுதீன் said...

முதல் கேள்வியே "மனிதாபிமானம்" அப்படின்னா என்னான்னு கேக்குற கூட்டம்தான் அதிகம்.

கவிதையில் உங்களின் உணர்ச்சிகளை / கோபத்தை வெளிப்படுத்திய விதம் சரிதான்.

Anu said...

shakthi kumar said...
"மனிதாபிமானம் கிலோ எத்தனை ரூபாய்????"

vithaalum yaarume vaanga maattaanga azeez

AEN SHAKTHI ATHU ENNA AVVALVU VILAI ATHIKAMA?

Anu said...

shakthi kumar unga karutyhukaluku roampa nandri

Anu said...

பாலா said...
rovuththiram pazhakureyo???
mmmmmmmmmmmm


Palakala BALA
en kudaveeee piranthathu
ethanai naal than poruthu kolvathu...
( Bharathi en thalai ache hahahahhaha athaan ponki elzunthiten..)

Anu said...

நட்புடன் ஜமால் said...
உங்களுக்கான எனது ஒரே கேள்வி
மனிதாபிமானம்
எங்கு கிடைக்கும் கிலோ எத்தனை ரூபாய் ???
\\

கேள்வி சரி ...

கேட்க்கப்படும் இடம் தவறு

Puriyavillai.

Anu said...

நட்புடன் ஜமால் said...
நல்ல உணர்வு கவிதை.
Nandri Jamal Anna

Anu said...

S.A. நவாஸுதீன் said...
முதல் கேள்வியே "மனிதாபிமானம்" அப்படின்னா என்னான்னு கேக்குற கூட்டம்தான் அதிகம்.

கவிதையில் உங்களின் உணர்ச்சிகளை / கோபத்தை வெளிப்படுத்திய விதம் சரிதான்.

appadi neengalum n katchi thaan ..
hahahhaha.thanks navaaas

rose said...

மனிதாபிமானம்
எங்கு கிடைக்கும் கிலோ எத்தனை ரூபாய் ???
\\
நல்லா இருக்கு azee உங்க கேள்வி

Anu said...

rose
pathil kidaikatha kelvi thu