Monday 23 February, 2009

இழப்பு

இழப்பு ........
இவளது வாழ்கையில் பழகி போன ஒன்றுஆனாலும்
ஒவ்வருதடவை சந்திக்கும் போதும்
சுக்காய் உடைந்து போகின்றது நெஞ்சம்
சுதந்திரமாய் சுற்றி திரிந்த காலத்தில்-என்
இறகுகள் பறிக்கபட்டு கூண்டில் அடைப்பட்டேன்
சுவாசிப்பதற்கும் அனுமதிவேண்டி நின்றேன்
புயல் வீசி சென்றபின் வந்த சிறு தென்றலாக
வாழ்வில் மீண்டும் வசந்தம் வர கொஞ்சம்
மகிழ்ந்து தான் இருந்து விட்டேன் - வானில்

பறக்க துடிக்கும் சின்னஞ் சிறு பறவையாய்..
துன்பபுயல் மீண்டும் வீச இதோ...என் சிறக்குகள்

பறிக்கப்பட்டு மீண்டும் துன்ப கூண்டில் இவள்.....

( எவனோ சொன்னான் துன்பம் இன்பம் மாறி மாறி வரும் என்று ..இன்பம் என்றால் ஏன்னங்க?.....)















1 comment:

பாலா said...

inbamna thunpathin ethir patham anu
athu kidaikutha illaiya enapthu veru visayam
its a antonyms of thunpam