Friday 3 April, 2009

பொய்யல்ல ....


கண்ணில் விழுந்த காட்சி பொய்யாகலாம் -நம்
கருத்தில் விளைந்த எண்ணங்கள் பொய்யாகலாம்
காகிதம் கொண்ட நம் எழுத்து பரிமாற்றங்கள் பொய்யாகலாம்
கணினி வழி நம் மனங்கள் சந்தித்த நாட்கள் பொய்யாகலாம்

கருங்குயில் கானம் பொய்யாகலாம் -நம்

கால் தடம் பதித்து நடந்து மகிழ்ந்த அந்த

கடல் கரை கொண்ட அலைகள் பொய்யாகலாம்

காற்று...மனம் கொள்ளை கொண்ட அந்த அழகிய

கானகம் ...எல்லாம் பொய்யாகலாம் ....ஆனால்

களங்கமில்லா என் அன்பு பொய் என்றாயே

களங்கம் நிலவிலும் உண்டு ...ஆனால்

கடவுளுக்கு உண்டோ ???...நான் உன்னில் கொண்ட

கள்ளமில்லா அன்பு அந்த கடவுளுக்கு

காலடியில் தவழும் பூக்கள் போல அன்றோ ?

காயங்கள் கொண்டது என் மனமும் நண்பா உனது

கசையடி கொண்ட வார்த்தைகளால் ....நான்

காற்றில் கரைந்து போஅனாலும் -என்

கல்லறை பூக்கள் மறக்காமல் சொல்லும் உன்னிடம்

கபடம் இல்லா என் அன்பு பொய்யல்ல .....என்று




5 comments:

நட்புடன் ஜமால் said...

எல்லாம் ஆகலாம் தான்!

பொறவு ...

shakthikumar said...

unmaiyaana anbu poipathillai manitha
manam thaan athai purinthu kolla
marukirathu
BH UAE

sakthi said...

கண்ணில் விழுந்த காட்சி பொய்யாகலாம் -நம்
கருத்தில் விளைந்த எண்ணங்கள் பொய்யாகலாம்
காகிதம் கொண்ட நம் எழுத்து பரிமாற்றங்கள் பொய்யாகலாம்
கணினி வழி நம் மனங்கள் சந்தித்த நாட்கள் பொய்யாகலாம்

kavithai nandru

sakthi said...

நான் உன்னில் கொண்ட

கள்ளமில்லா அன்பு அந்த கடவுளுக்கு

காலடியில் தவழும் பூக்கள் போல அன்றோ ?

varthaigal alagu

HARI said...

hey anu no chance da u simply awesome.. u r rocking here.....