Monday 20 April, 2009

புலம்பல்

என் நெருங்கிய நண்பர் ஒருத்தர் தன்னுடைய வலைத்தளத்தில் ஒரு அழகான
கவிதை போட்டிருந்தார் .அது இதுதான் ....
"இரவு தொலைக்காட்சி செய்தி
இலங்கைப்போர் பொது மக்கள் பலி
" உச்"ரிமோட் உயிர்த்தெழ
"மானாட மயிலாட "இன்னொரு சேனலில்
"
படித்ததும் மனதிற்கு வேதனையாக இருந்தது ..இன்று நம்மில் பலரது நிலைமையும் அதுதானே ?? யாருக்கோ வேதனை என்றால் நமக்கு அது ஒன்றும் பெரிதாக தோன்றுவதில்லையே ??.. வீணான பொழுது போக்கு விஷயங்களில்திருப்பதி கொள்ளும் நாம் ஏன் நம்முள் ஒருவன் மரண வலி அனுபவிக்கும் போது நமக்கு அது சாதாரண நிகழ்ச்சியாகி விடுவதுமேன் ?? நம்முள் மனிதாபிமானம் எங்கே போனது ?..ரோஜாவை பார்க்க பழகி விட்ட நம் கண்களில் முட்கள் தெரியாமல் போய்விட்டதே

இலங்கையில் தினம் தினம் நுற்றுக் கணக்கில் மனிதாபிமானம் இன்றி உயிர் பூக்கள் கரிக்க படுகின்றதே .அவர்கள் செய்த பாவம் தான் என்ன? கொடுர விலங்குகள் கூட பசி எடுத்தால் தான் இன்னொரு விலங்கை வேட்டை ஆடும் .ஆறறிவு கொண்ட விலங்கை விட கேவலமாகி விட்டதே நம் நிலைமை .. " அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது " ஐயோ... எங்களுக்கு என் இந்த மனித பிறவி கொடுத்தாய் இறைவா.. என்பதுதான்இலங்கையில் ....இன்றைய ஒவ்வொரு மனிதனின் புலம்பல் ...புலம்பல்கள் தொடர்கதையாய் இருந்தாலும் எங்கள் காதுகளில் கூத்தாடிகளின் ஒலகுரல் ஒலிக்கும் போது அவர்களின் அவலக்குரல் கேட்பதில்லை கேட்டாலும் அதை நாம் விரும்பவும் இல்லை . என்னாயிற்று ...நாம் மனிதர்கள் என்பது மறந்து மரித்து போனது ஏன்? ..

இளைய சமுதாயமே ..இனியாவது ஏழுவோம்.. பண்பற்று போய்கொண்டிருக்கும்
கேளிக்கைகளில் மதிமயங்கி விடாமல் .. நம்மில் ஒருவன் படும் வேதனை துடைக்க போக்க முயற்சி செய்வோம் ...

3 comments:

shakthikumar said...

manitha samuthaayathin veezhchikkana adayaalam
ithu manithanai manithanaaga mathikkaamal manasaatchiyindri
manithargal endra porvaiyil thaakkuthal nadathum mirugangal
aararivu irunthum arivatru ponavargal arasaalvathaal varum prachanai ithu
andre sonnaan bhaarathi
pei arasaandaal pinam thinnum saathirangal athuthaan nadakkuthu ilangaila indru ulaga naadugal(including india) amaithi kaappathuthaan vetkka kedu

nandri azeez azhagaana karuthu manithaabimaanam engiyirukirathu ungalai pola silaridam

brave heart uae

Anu said...

sakthi kumar..nandri negalavathu accept sythengalae//..nallathu paesina yaruku pidikum ha ha ha

hari said...

supera pesura unaku bright future iruku,, politics la seru da