Saturday 18 April, 2009

தாலி வேலியா?? வேதனையா?

மாலை சூடும் மணநாள் இளம் மங்கையர் நாளில் திருநாள் ...இந்த பாட்டை எப்போதோ கேட்ட நினைவு .. எத்தனை பெண்களின் வாழ்க்கை திருநாள் ஆகி இருக்கின்றது ?..நான் கண்டவரை மணநாள் மரண நாளாக தான் ஆகி உள்ளது .
பெண் பார்க்கும் படலம் முதலே தொடங்கி விடுகின்றது ..இவர்களின் ஆணவ அதிகாரம் .ஏன் என்றால் அவர்கள் மாப்பிளை வீட்டராம் .ஆண் பிள்ளை யை மட்டும் எந்த தாயாவது பதினோரு மதம் சுமந்து இருக்கின்றாளா ??.. இதில் வேதனை க்குரிய விஷயம் என்னவென்றால் பெண்வீட்டரும் எதோ பாவிகள் போல அவர்கள் முன் பல் இளித்து நிற்பதன் காரணம் எனக்கு இன்னும் புரியவில்லை . கூட்டத்தில் ஒருத்தர் ஆரம்பிபார் பொண்ணை வர சொல்லுங்க பார்க்கலாம்னு ஏதோ மாட்டு சந்தையில் மாட்டை பார்க்க வந்தவர் போல ..அப்புறம் பெண்ணிடம் தனியா பேசனும் ..இது மாப்பிளையின் வேண்டுகோள் .அப்புறம் பொண்ணுக்கு
சமைக்க தெரியுமா?? ஏம்மா கொஞ்சம் நடந்து காட்டு இது போன்ற பொதுவான ஆனால் கட்டாயமான கேள்விகள் கேட்கப்படும். அதன் பிறகு மாட்டுக்கு மன்னிக்கவும் பெண்ணிற்கு தொகை பேசி முடிக்கப்படும் .இங்கே மட்டும் பொருளை ஏற்று கொள்பவர்க்கு பணம் கொடுக்கப்படும்.
திருமண நாள் .......
இது பெண்ணிற்கு அதிகார பூர்வமாக விலங்கிடும் நாள். தாலியும் அணிந்திடுவேன் உன்னை தாரமாக ஏற்று கொள்ளுவேனு தாலி கட்டிடுவாங்க ..அது பெண்ணிற்கு பூட்டப்படும் பாதுகாப்பு வேலியா இல்லை ..அது நாசுக்காக கட்டப்படும் மூக்கணாங்கயிரு. அதன் பிடி எப்போதும் அவன் கையில் ..நான் உங்களை கேட்கின்றேன் இந்த தாலி அவசியம் தானா?. பெண்களுக்கு திருமணம் ஆனதின் அடையாளம் தானே அப்படி என்றால் திருமணமான ஆணின் அடையாளம் என்ன ? அவர்களும் தாலி அணிவதுதனே நியாயம் . ஆனால் பெண்ணிற்கு திருமணமாகி விட்டது என்று அடையாளம் இடும் நீங்கள் உங்களை மட்டும் அதிலேருந்து மறைத்து கொள்வதேன்
சொல்லுங்கள் ஆண்வர்க்கமே ??. ஒரு உலோகத்துக்கு கொடுக்கும் மதிப்பு இன்று மனித மனங்களுக்கு எங்கே இருக்கின்றது .
மணவாழ்வில் காலடி வைக்கும் அந்த கணமே மெட்டி என்று ஒரு சிறிய விலங்கு பூட்டுகிறான் . அடி பேதை பெண்ணே ..நாணமுடன் அதையும் சுமந்து கொள்கின்றாயே ..திருமண நாளில் பெண்ணிடம் ஒப்பந்தம் வாங்குவது எதற்கு ?
இன்று முதல் பெண்ணாகிய நான் உன் அடிமை என்று திருமண ஒப்பந்தம் என்ற பேரில் அடிமை சாசனம் எழுதி வாங்கி விடுகின்றனர் .
வரதட்சணை......இதில் மட்டும் சரியாக இருப்பார்கள் பணம் வசூல் செய்பவர்கள் . இஸ்லாமிய சமுகத்தில் ஒரு சட்டம் இருக்கின்றது அதாவது திருமணம் முடிக்க விரும்பும் ஆண் மணபெண்ணிற்கு மஹர் என்று சொல்லக்கூடிய ஒரு தொகை அது பணமாகவோ தங்கமாகவோ இருக்கலாம் அதை கொடுத்து அப்பெண்ணை
மணம் முடிக்கும் சட்டம் இருக்கின்றது .மேலும் இஸ்லாம் வரதட்சணை வாங்குவதை கடுமையாக தண்டிக்கிறது .ஆனால் எத்தனை பேர் அப்படிஇருக்கிறார்கள் ??? வரதட்சணை வேண்டாம் என்று சில பேர் வருவது உண்டு . அட இப்படி கூட மனிதர்கள் உண்டா என்று என்ன தோன்றும் ஆனால் உண்மை என்ன வென்றால் இவர்கள் இப்படி வரதட்சணை வேண்டாம் என்று மொழிவது வசதியான குடும்பத்தில் தான் . வரதட்சணை பேசி ..நேரடியாக
பிச்சை வாங்குவரும் உண்டு இப்படி வேண்டாம் என்று மறை முக பிச்சை வாங்குவரும் இருக்கிறார்கள் . எதற்கு இந்த வேதனை ?? திருமண வாழ்க்கை
மரண வாழ்கையாக மாறியதும் ஏன்? மாந்தர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுதுவோம என்ற பாரதி காலம் முதல் இன்று வரை எங்கள் அடிமை சாசனம் தொடர்கதையாகா...
நீங்கள் சொல்லலாம் பெண்கள் இன்று எட்டாத வெற்றி இல்லை என்று ..அப்படி
வெற்றி பெற்றவர்கள் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கின்றதா? எத்தனை வேலைக்கு போதும் பெண்கள் எல்லா சுமைகளையும் சுமந்த படி மனதிற்குள் வெந்தபடி வாழ்கின்றனர் .சுமைகள் என்றும் பெண்களுகே ....இதில் இளைப்பாற நிழல் தேடி குடும்பத்திற்குள் வந்தால் அய்யா பெரியோர்களே கொஞ்சம் எங்களை முச்சு விட விடுங்கள் ..உங்கள் பழமை பேசி எங்களை உயிருடன்
சமாதி ஆக்குவதை இனிமேலாவது நிறுத்துங்கள் வாழ விரும்புகின்றோம
எங்களை வாழ அனுமதியுங்கள் இன்னும் வசை பாடி வஞ்சனை செய்வதை நிறுத்துங்கள் ........( புலம்பல் தொடரும் ...)
குறிப்பு : (நான் இந்த பதிவில் எல்லா ஆண்களையும் குற்றம் சாற்ற வில்லை ..ஒரு சில ஆண்கள் நல்லவர்களே .....)

6 comments:

sakthi said...

அய்யா பெரியோர்களே கொஞ்சம் எங்களை முச்சு விட விடுங்கள் ..உங்கள் பழமை பேசி எங்களை உயிருடன்
சமாதி ஆக்குவதை இனிமேலாவது நிறுத்துங்கள் வாழ விரும்புகின்றோம
எங்களை வாழ அனுமதியுங்கள் இன்னும் வசை பாடி வஞ்சனை செய்வதை நிறுத்துங்கள் ........( புலம்பல் தொடரும் ...)

nice thought azeez

sakthi said...

arumai nanba varaverkiren

keep it up....

Anu said...

Shakthi ..
nijamaha vantha varthaikal .
mikka nandri

shakthikumar said...

குறிப்பு : (நான் இந்த பதிவில் எல்லா ஆண்களையும் குற்றம் சாற்ற வில்லை ..ஒரு சில ஆண்கள் நல்லவர்களே .....)
naandri azeez

shakthikumar said...

kavithai kathayai thodanthu ippo
katturaiyilum kalakkureenga
romba nallaa irukku azee
anaa varathatchanaiyai pothavaraikkum pengalukku pengalaal thaan thollai perumbaalum manamaganin thaayaar thaan nirbanthikkaraanga
irunthaalum athai thavirkka vendiya poruppu manamaganukkum undu

Thilak said...

I dont agree with you azeez.
Are you talking about this generation??? Do you think arranged marriage is hapening in this manner.

Whatever you are written here may apply some time back in 80's not any more...

Kandippa THALI Vethannai than not for Girls ...(may be for boys :) )