Monday 13 April, 2009

கோபம் ஏனடி...?


என்னில் முகம் நீக்கி நீ கோபப்படும் போதுலாம் என்
உயிர் உருகி கண்ணீராய் வழிந்து உதிரம் உறைகின்றது
உன்னில் நான் கொண்ட அன்புசாசனம் எடுத்து உரைத்த பின்
கருணைகாட்டும் அன்னை போல் அணைத்து கொள்கின்றாய்
சிறுபிள்ளை போல் என் மனம் சிதைத்து மணல் வீடு கட்டுகிறாய்
உன் கோப அலை அடித்து துகள் துகளாய் நான் சிதறியதும் அறியாமல்
உயிர் பரிமாறிய நம் காதல் வளர ஊடலும் நல் உரமாகும் என்கின்றாய்
காரணம் அறியாமல் பித்தனாய் நானும் அலைகின்றேன்
கடவுளை காண வேண்டிய பக்தனை போல....

11 comments:

Unknown said...

சிறுபிள்ளை போல் என் மனம் சிதைத்து மணல் வீடு கட்டுகிறாய்
உன் கோப அலை அடித்து துகள் துகளாய் நான் சிதறியதும் அறியாமல்
reallllllllllly superb azeez

நட்புடன் ஜமால் said...

\\உயிர் உருகி கண்ணீராய் வழிந்து உதிரம் உறைகின்றது\\

மிக அருமை.

sakthi said...

உயிர் உருகி கண்ணீராய் வழிந்து உதிரம் உறைகின்றது உன்னில் நான் கொண்ட அன்புசாசனம் எடுத்து உரைத்த பின்
கருணைகாட்டும் அன்னை போல் அணைத்து கொள்கின்றாய்


மிக அருமை.

sakthi said...
This comment has been removed by the author.
sakthi said...

அறியாமல் பித்தனாய் நானும் அலைகின்றேன் கடவுளை காண வேண்டிய பக்தனை போல....

superb da azee

பாலா said...

உயிர் பரிமாறிய நம் காதல் வளர ஊடலும் நல் உரமாகும் என்கின்றாய்
காரணம் அறியாமல் பித்தனாய் நானும் அலைகின்றேன்
கடவுளை காண வேண்டிய பக்தனை போல....


pineeta anu

super

Anonymous said...

உண்மை காதல் உணர்ந்த போது ஊமை வலிகளும் உயிர் வலி சொல்லும்...ஊடலின் வலியை இப்படி படிப்போரின் உள்ளமும் துடிக்க...கூடலில் இன்பம் நீ மட்டும் படிக்க....கூடலுக்காகவே மீண்டும் ஒரு ஊடல் தோன்றாதா என்று ஏங்குது மனம்....அழகாய் ஒரு ஓவியம் மனதை அழவைத்து ஆராதித்தது..........nice ya

Anu said...

paratiyathirku nandri sakthi uae
thanks Jamal sir
Shakthi ma roampa nandringoo
bala ...ellam unga asirvatham
hahahhahahha
Vanga tamilarasi..
parati rasithu n kavithaiku kavithai alithamaiku nandri pa

Nava said...

kathal..!!! valigal maddume adankiyathu..!!!! nice kavithai..!!! nampaa..!!!

புதியவன் said...

//காரணம் அறியாமல் பித்தனாய் நானும் அலைகின்றேன்
கடவுளை காண வேண்டிய பக்தனை போல....//

நச்...வரிகள்...

Anonymous said...

u r rocking dear..........