Wednesday 8 April, 2009

சில இரத்த துளிகள் ...

பிரியாவும் கார்த்திக்கும் நெருங்கிய காதலர்கள் ..காதல் வானில் சிறகடிக்கும் சின்ன கிளிகள் .. அவர்களது காதல் அவர்களது பெற்றோர்க்கு தெரிய வந்தது .. இரண்டு பேரு வீட்டிலும் எதிர்ப்பு ..அதனால் பிரியாவும் கார்த்திக்கும் வீட்டை விட்டு வெளியே போயிட்டாங்க.. அதனால் அவமானம் வந்திரும்னு கார்த்திக் வீட்டுல அவுங்க காதலுக்கு சம்மதம் தெரிவிச்சாங்க
இரண்டு வீட்டிலும் சம்மதிச்சு சேர்த்து வச்சாங்க ..
கல்யாணம் ஆனதும் தேன் நிலவு கொண்டாட ..ஊட்டிக்கு போனாங்க ..
அப்போதான் அந்த கொடுரம் நடந்தது ...
கார்த்திக் தன்னோட மனைவிக்கு இளநீர் வாங்க ரோடு கிராஸ் பண்ணிய போது
அவன் மீது லாரி மோதி துடித்து இறந்து விட்டான் .தன் கண் முன்னே நடந்த தன் ஆசை காதலனுக்கு கொடுமையை கண்டு பிரியா உறைந்து போனாள்

நாட்கள் ஓடியது ..பிரியா கார்த்திக் நினைவில் வாழ்ந்து கொண்டிருந்தாள் . ஒரு நாள் அவளது அம்மாவின் கனவில் ஒரு பெண் வந்தாள் . உன் மகளின் புடைவையில் அவளது கணவன் இறந்த தருணம் அவனது இரத்தம் துளிகள் இருக்கின்றது .உடனே அதை கழுவி விடு என்றாள். அவளது அம்மா அதை பெரிதாக எண்ணவில்லை . அவளது அப்பாக்கும் அதே கனவு அவரும் பெரிதாக எண்ணாமல் இருந்து விட்டார் . அடுத்த நாள் ப்ரியாகும் அதே கனவு ..

ஆனால் ப்ரியாக்கு மனதில் பயமா இருந்தது அதனால அவ அந்த புடவை யை கழுவி போட்டாள் ..ஆனால் சில துளிகள் இருந்தது .. மறுநாளும் அதே கனவு .. ப்ரியா மீண்டும் கழுவி போட்டால் ஆனால் இரத்தம் போகவில்லை ..முன்றாவது முறையாக அதே பெண் வந்து சொன்னாள்.நீ முழுவதுமாக இரத்தம் போக கழுவ வில்லை ..மீண்டும் கழுவி போடு ..இது தான் நான் கடைசியா சொல்லுறேன் ..இனி நடப்பது நடக்கும் என்று சொன்னள்.ப்ரியா எவ்வளவு முயன்றும் அந்த இரத்தம் போகவில்லை .

ஒரு நாள் யாரும் இல்லா நேரம் கதவு தட்டும் ஓசை கேட்டது ..திறந்து பார்த்தள்.. ஏதிரே கனவில் வந்த அந்த பெண் இருந்தாள். அதிர்ச்சியில் நின்ற ப்ரியாவிடம் ஒரு பார்சல் கொடுத்தாள். ப்ரியா அதை திறந்து பார்த்தா உள்ளே வெள்ளை நிறமும் நீல நிறமும் கலந்த பவுடர் இருந்தது ... ஒன்னும் புரியாமல் ப்ரியா அந்த பெண்ணை பார்த்தாள்.அப்போது அந்த பெண் ....

நிர்மா வாஷிங் பவுடர் நிர்மா

நிர்மா வாஷிங் பவுடர் நிர்மா..

நிர்மாஆஆஆஆஅ

என்று பாட்டு பாடி இதை போட்டு கழுவு இரத்தம் காணாம போய்டும்னு சொல்லிட்டு போய்டுவா...

எப்படி நம்ம கதை ....சுட்ட கதை சுட சுட ...ந அருமை நண்பர் சாய்ரா பாலா வுக்கு

சமர்பனம் செய்றேன்

4 comments:

Unknown said...

sila ratha thuligal uraiyum
munne urainthuponen
hemo clobin kuraipaadaal allaa
thangal kathayin nirai paattaal

vaazhthukkal azeez
nallaave kadhai vidareenga
sorry kadhai soldreenga
hey just kidding
really superbbbbb

shakthi kumar uae

நட்புடன் ஜமால் said...

\\தன் கண் முன்னே நடந்த தன் ஆசை காதலனுக்கு கொடுமையை கண்டு பிரியா உறைந்து போனாள்\\

வார்தைகள் படிக்கையிலே உறைந்து தான் போனேன்.

Unknown said...

hayooooooo azeez superb ethir paaraatha conclusion

shakthikumar uae

பாலா said...

ada naan ennama pannunen
enakku en samarppanam lam

ayyo un tholla thaanga muduiayala