Thursday 2 April, 2009

பாரதி ஒரு கேள்விகுறி (பகுதி- மூன்று)

எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் ...பாரதி .... நீ உள்ள போ அப்பா அதட்ட வார்த்தை இழந்தவளாய் அமைதியாக கண்ணீர் துளிகளை சுமந்தவண்ணம் தன் அறைக்குள் சென்று கதவை தாளிட்டு கண்ணீர் வற்றும் வரை அழுதாள். அருகில் இருந்த பாரதியார் படத்தை பார்த்து எனக்கு உங்க பேரு வச்சது நினைச்சு எத்தனை நாள் பெருமை பட்டு இருகேன் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் ...இன்னைக்கு நான் ஒரு அடிமை என்னை மீட்க வருவிங்களா பாரதி ???.அழுது அழுது அப்படியே தூங்கி விட்டாள்.

அழகிய மலர்கள் ஒன்று சேர்ந்து மாலையா மாறிவிட மணநாளும் வந்தது.
சுற்றங்கள் மகிழ பாரதி திருமதி ஆனாள். முதல் இரவு அன்று கனவுகள் வந்து கண்ணில் மின்ன பிரவீன் பாரதியின்

வரவை எதிர்பார்த்து இருந்தான். பூவுகே பூக்கள் சூடி அழகு தேவதை போல் அலங்கரித்து இருந்தார்கள் பாரதியை ..அவள் மனதிலோ போன வாரம் அய்யனாருக்கு நேர்ந்து பக்கத்து வட்டில் ஆசையா வளர்த்த கிடா பலிகொடுத்த நினைவு வந்தது. என் நிலைமையும் அதுதானே ..கண்ணீர் துளிகள் ரோஜாபூ கன்னம் அதில் கோலம் இட அறையில் நுழைந்தாள் .

மனதில் பட்டாசு வெடிக்க கண்களில் அந்த பிரகாசம் தெரிய வா பாரதின்னு பிரவீன் வரவேற்றான் .தென்றல் காற்று கூட இன்று அனலாய் அடித்து அவளுக்கு கண்களில் தீ பொறி தெறிக்க பிரவீன் மீது கோப பார்வை விசி பின்பு அமைதியாக

சன்னல் வழியே எட்டி பார்த்த நிலவை நோக்கினால் .பாரதி உனக்கு என் மேல கோபம் இருக்கும் ஆனா எனக்கு வேறு வழி தெரியல நீ எனக்கு வேணும் .உன்னை நான் ரொம்ப விரும்புறேன் பாரதி ..நீ தான் என் மனைவின்னு

என் நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து உன்னை நெனைச்சிட்டு இருகேன். நிறுத்துங்க ... அது எப்படிங்க உங்க மனசை மட்டும் பார்க்க தெரிஞ்ச உங்களுக்கு எனக்கும் மனசு இருக்கு நு தெரியாம போச்சுதா? நான் உங்ககிட்ட தனியா சொன்ன பிறகும் நீங்க எனக்கு செய்தது துரோகமா இல்லையா ???.பாரதி.... ப்ளீஸ் பிரவீன் என்னை விட்டுருங்க உங்க அனைவராலும் விளையாட பட்ட பொம்மைதான் நான் .. என்னால உங்க கூட குடும்பம் நடத்த முடியாது ..நாம பிரிஞ்சுடலாம் பிரவீன் .....

இப்படி ஒரு வார்த்தையால் தன் இதயம் நொறுங்கும் என நினைகதவனாய் நெஞ்சில் வார்த்தை அம்பு பாய்ந்த வலியோடு பாரதி...என்னைபொறுத்தவரை நீ சந்தோசமா இருக்கணும் அதனால நான் ஒரு முடிவுஎடுத்துட்டேன் .... (மீண்டும் வருவாள்)

4 comments:

Unknown said...

naatila pala pengalukku intha maahdiri
prachanai irukku azee m irukka irukka
viru viruppa poguthu

shakthi uae

sakthi said...

kathai arumai
valthukkal thodarnthu eluthungal

sakthi said...

kathai kavithaiyaga ullathu

நட்புடன் ஜமால் said...

சீக்கிரம் அடுத்த பதிவிடுங்கள்

ரொம்ப ஆர்வமா இருக்கு.