Wednesday 2 November, 2011

பரவசம்


சின்ன சின்ன அடி எடுத்து நடக்கையில்

சிவந்திடும் உன் பதத்தின் அழகை கண்டு

நிறமிழந்து விடுகின்றது என் கவலைகள் ...

ம்மா என்று நீ அழைத்திடும் அந்த ஒற்றை

சொல்லால் என் மொழிகளை பறித்துக்கொண்டு


புன்னகையை என்னில் பூசி விடுகிறாய் ..


உன் பிஞ்சு கைகள் என் முகம் தொடுகையில்

பொங்கிடும் இந்த பரவசத்தின் நிலை தான்

தாய்மையோ ??

உன் பூவிதழ்கள் அசைத்து பால் பருகையில்

எழுந்திடும் இந்த ஓசைக்கு நிகர் எந்த ஒரு

இசையும் இல்லையடி ..இசை மீட்டும் இசையும் நீதான்


எனை காணாமல்  தேடும் அத்தருணங்கள் உன்

விழிகள் வடிக்கும் கண்ணீரில் கரைந்து போகும்

என் உயிரும் .என்ன மாயம் செய்தாயோ ??


உன் முகம் பாராது இருக்கும் நிலையில்

உன் உலகம் நான் என இரு கைகள் நீட்டி

உனை தூக்க சொல்லி அழைகின்றாய் -என்

உலகம் நீ மட்டும் தான் என அறியாமல்
...

No comments: